ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!

0
135

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!நாம் அனைவரும் விரும்பியதை அடைய வேண்டும் என்றாலே சில போராடத்தான் வேண்டும். விரும்பிய பொன், பொருள், விரும்பிய வாழ்க்கை, என்று எதுவாக இருந்தாலும் சரி நாம் விரும்பிய பொருள் கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு தான் நமக்கு கிடைக்கிறது. அவ்ளோ ஈசியாக நாம் விரும்பியதை அடைந்து விட்டால், நாம் அடைந்த அந்த பொருள், வந்த வேகத்திலேயே நம் கையை விட்டு விலகி சென்று விடும். நம்மில் பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அல்லவா. நீங்கள் ஒரு விஷயத்தை விரும்பி ஆசைப்பட்டு நீண்ட நாட்களாக அதை அடைவதற்கு முயற்சியும் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அடைய முடியவில்லை. அப்படிப்பட்ட முடியாத ஒரு விஷயத்தை சாதிக்க ஒரு சிறிய தந்திர பரிகாரம் தாங்க இது

 

பள்ளி படிப்பு முடித்துவிட்டு, விரும்பிய மேற்படிப்பை படிக்க, விரும்பிய திருமண வாழ்க்கை அமைய, விரும்பிய வாழ்க்கை துணையின் கரம் பிடிக்க, விரும்பிய வேலையில் சேர, விரும்பிய குறிக்கோளை அடைய, வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, இப்படி உங்களுடைய எந்த விருப்பம் இருந்தாலும் அதை நிறைவு செய்ய நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறான எண்ணத்தோடு தவறான வழியில் தவறான விஷயங்களை அடைய இந்த பரிகாரத்தை செய்தால் அதன் மூலம் நிச்சயம் பலன் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டு வாசல் முன்னாடி செய்ய வேண்டும். ஒரு தாம்பூல தட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிழக்கு பார்த்தவாறு உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பு அந்த தாம்பூல தட்டை வைத்து ஒரு கற்பூரத்தை வைத்து, அந்த கட்டி கற்பூரத்தை பற்ற வையுங்கள். மெழுகு கற்பூரத்தை பயன்படுத்த வேண்டாம். எரிகின்ற இந்த கற்பூரத்தில் மூன்று பிரியாணி இலை, மூன்று பட்டை துண்டுகளை போட வேண்டும்.

 

மேலும் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரியாணி இலை, பட்டை இந்த இரண்டு பொருட்களையும் ஓம் என்ற வார்த்தையை உச்சரித்துக் கொண்டே போடுங்கள். ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டாலும் சரி, மொத்தமாக எடுத்துப் போட்டாலும் சரி. அது உங்களுடைய விருப்பம். ஆனால் நீங்க போட்ட பொருட்கள் அனைத்தும் அந்த கற்பூர நெருப்பில் எரிந்து சாம்பலாக வேண்டும்.

 

நெருப்பில் இந்த மூன்று பொருட்களை போட்ட உடனேயே நெருப்பு பிடித்து எறிய தொடங்கும். அப்போது அந்த புகையிலிருந்து ஒரு வாசம் வெளிவரும. அந்த சமயத்தில் ஒரு ஐந்து நிமிடம் வரை அந்த நெருப்பு எரிந்தால் கூட போதும். குறிப்பிட்ட அந்த ஐந்து நிமிடத்தில் உங்களுடைய நிறைவேறாத ஏதாவது ஒரு ஆசை மனதில் நினைத்துக் கொண்டு அது நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மனதிற்குள் இருக்கும் அந்த ஆசையை மனதார இந்த உலகத்திடம் சொல்லுங்கள் வாய்விட்டு சொன்னால் கூட தவறு கிடையாது. கற்பூரம் எரிந்து முடியும் வரை வேண்டுதலை சொல்லிக்கொண்டே இருங்கள்.

பிறகு உங்கள் குறிக்கோளை அடைவதற்கு எந்த ஒரு தடையும் இருக்காது. அதற்காகத்தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. வாரத்தின் ஒரே ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும், ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். அதன் பின்பு உங்களுடைய நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு என்ன முயற்சியோ அதை நீங்கள் மேற்கொண்டு வாருங்கள். நிச்சயமாக நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து முடிக்கிறேன்.

 

 

author avatar
Parthipan K