ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!..

0
92

 

 

ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!..

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனம் என்பது மத்திய ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலன் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்புகள் விடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 

கரும்பு வளர்ப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவுடைய நபர்களுக்கு மாதம் ரூ.21,420 சம்பளம் வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நியமனம் ஆரம்பத்தில் ஒரு வருட காலத்திற்கு மட்டும் தான் இருக்கும். ஒரு வருடத்திற்கு பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிப்பு செய்யப்படும். ஆர்வமுடையவர்கள் மற்றும் தகுதி உடையவர்கள் முன்னாள் படைவீரர்கள், 03.08.2022 அன்று காலை 10.00 மணிக்குக்குள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் நபர்கள் ICAR கரும்பு வளர்ப்பு நிறுவனம் கோவையில் இருக்கின்ற தேர்வாணையத்தில் நேர்காணலுக்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த பணிக்கான விவரங்கள், பணி நேரம், , முதலியன நிர்வாக அதிகாரி, ICAR-SBI, கோயம்புத்தூர் (மின்னஞ்சல்: [email protected] ) முகவரியில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.மேலும் விவரங்களை அறிய PH. 042-2472621 என்ற எண்ணிற்கு missed call கொடுக்கவும்.

author avatar
Parthipan K