பிரம்மாண்ட இயக்குநர் திரைப்படத்தில் வில்லியாகும் காஜல் அகர்வால்!!! அதுவும் எந்த நடிகருக்கு என்று தெரியுமா!!?

0
30
#image_title

பிரம்மாண்ட இயக்குநர் திரைப்படத்தில் வில்லியாகும் காஜல் அகர்வால்!!! அதுவும் எந்த நடிகருக்கு என்று தெரியுமா!!?

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து உருவாகப் பழகும் திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வில்லியாக நடிகை காஜல் அகர்வாலை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிரபல தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி அவர்கள் நான் ஈ என்ற திரைப்படத்தை இயக்கினார். பின்னர் மகதீரா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 திரைப்படங்கள் பெரும் வெற்றியையும் புகழையும் பெற்றுத்தந்தது. பின்னர் இவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் அவர்கள் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் அந்த திரைப்படத்தில் மகேஷ் பாபு அவர்களுக்கு வில்லியாக ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்களுக்கு பதிலாக படக்குழு வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதாவது நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் நடிக்க மறுப்பு தெரிவித்த வில்லி கதாப்பாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் அவர்களை நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே இயக்குநர் ராஜாமணி அவர்களின் இயக்கத்தில் மகதீரா திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது நடிகர் மகேஷ் பாபு அவர்கள் ஹீரோவாக நடிக்கும் பழகும் திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் வில்லியாக நடிக்கப் போகிறார். ஹீரோயினாக பார்த்த காஜல் அகர்வால் அவர்களை வில்லியாக பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.