அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை.!!மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!!

0
75

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும், தற்போது நிலவி வரும் வானிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.