Friday, October 18, 2024
Home Blog Page 3377

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்!

0

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்!

தற்போது கொரானா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதன் காரணமாக உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவருக்கும் தடுப்பூசிகள் போட அறிவிக்கப்பட்டு உள்ளன.

பல நாடுகளில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட தொடங்குவதாக பேச்சு வார்த்தைகள் உள்ளன. இந்த நிலையில் உலகிலேயே முதல் முறையாக இரண்டு வயது குழந்தைகளுக்கு கூட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் அங்கு மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது.

இந்த சூழலில் திங்கட்கிலமையான நேற்று முதல் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா அரசு ஆரம்பித்து உள்ளது. கியூபாவின் மத்திய மாகாணமான சியன்பியூகோஸ் பகுதியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை ஆரம்பித்து விட்டது. சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

ஆனால் கியூபாவில் அதை முதன் முதலில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. தற்போது கியூபாவில் போடப்பட்ட தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இதுவரை எதுவும் ஒப்புதல் அளிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு அக்டோபர், நவம்பரில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட்ட பின்னர் தான் பள்ளிகள் திறக்கும் என்று அரசு அறிவித்ததை அடுத்து இந்தத் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

தலீபான்களுக்குள் மோதல்! புதிய ஆட்சி அமைப்பதில் தகராறு! தலைவர் காயம்!

0

தலீபான்களுக்குள் மோதல்! புதிய ஆட்சி அமைப்பதில் தகராறு! தலைவர் காயம்!

ஆப்கானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதன் காரணமாக ஆட்சி அதிகாரம் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன் காரணமாக புதிய அரசு விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த புதிய அரசில் தலிபான்களின் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக அவர்களுக்குள்ளும், ஹக்கானி வலை குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது குழுவின் தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும், ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் போது தலிபான்களின் தலைவர் பரதர் காயமடைந்தார்.

இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே இந்த பிரச்சினையை சுமுகமாக பேசித் தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பின் தலைவர் ஹமீது காபூலுக்கு விரைந்தார். அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இடைக்கால அரசு அமையும் எனவும் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் : தெறித்து ஓடும் பிரபலங்கள் !

0

பிரபல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தயங்கி பல நட்சத்திரங்கள் பின்வாங்கியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகெங்கும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பிக்பாஸ் என்னும் பெயரில் இந்தியில் முதலாவதாக ஒளிப்பரப்பாகி வெற்றிபெற்றது. ஒரு மனிதனுடைய தனித்துவம் மற்றும் அவர்கள் மற்றவர்களோடு நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

காதல்,கவர்ச்சி,விளம்பரம் போன்றவற்றையே அடிநாதமாக கொண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிவருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சின் அடுத்த சீசனுக்கான ப்ரோமோவை மக்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அவ்வப்போது தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்துவந்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் பலரும் தயங்கிவருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் முந்தைய சீசன்களில் பங்கேற்ற பலரும் எதிர்மறையாக்கப்பட்டதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக நமீதா,காயத்ரி ரகுராம், கஞ்சா கருப்பு, மகத் போன்ற பல பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகளவில் ரசிகர்களை இழந்தனர். இதனால் பல பிரபலங்கள் அடுத்தடுத்த சீசனில் பங்கேற்க தயங்கினர்.

அதேபோல் இந்தாண்டும் பிரபலங்கள் பங்கேற்க தயங்குவதால் வழக்கம்போல் விஜய் டிவி பிரபலங்களை கொண்டே இந்நிகழ்ச்சியை நடத்தும் திட்டத்தில் அந்த தொலைக்காட்சி ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூவத்தில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

0

சென்னையில் மெடிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த இளைஞர்களை கூவத்தில் குதித்து பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் ‘சென்னை மெடிக்கல்’ என்ற பெயரில் மருந்துக்கடையில் கடந்த 3.9.2021-ம் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது இக்பால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மெடிக்கல் கடையில் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மந்தைவெளி பகுதியில் பதுங்கியிருப்பதாக இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் தலைமையிலான காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞர்கள் கூவம் ஆற்றில் குதித்துத் தப்பிக்க முயன்றனர். அதைப்பார்த்த காவல்துறையினரும் கால்வாயில் குதித்து இளைஞர்களை மடக்கினர். பின்னர், பிடிபட்ட இளைஞர்களை போலீஸார் குளிக்க வைத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் விசாரித்தபோது அவர்களின் பெயர் ராஜேஷ், விஜயகுமார் எனத் தெரியவந்தது. இவர்கள் மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

பள்ளிகள் மூடப்படுமா : மாணவர்களுக்கு தொடரும் கொரோனா பாதிப்பு!

0

தமிழகத்தில் கோயம்பத்தூர், புதுக்கோட்டை, கரூர், திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரண மாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ஆம் தேதி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இந்நிலையில், கோவை சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் தவிர திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, மன்னார்குடி அருகே முன்னாவல்கோட்டை அரசுப் பள்ளி மாணவர், திருத்துறைப் பூண்டி அருகே தலைக்காடு அரசுப் பள்ளி மாணவர், வலங்கைமான் அருகே அரித் துவாரமங்கலம் அரசுப் பள்ளி மாணவர் என 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் 2 பேருக்கும் புரவிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி ஒருவருக்கும் பணிக்கம்பட்டி தனியார் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

கரூர் மாவட்டம் பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கடந்த 3-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதே போல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஆசிரியையின் மகனுக்கும் தொற்று உறுதியானது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை யடுத்து, அந்த ஆசிரியரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு பரிசோதனை செய்ததில், ஆசிரியரின் 8 மாத குழந்தை உட்பட குடும்பத்தினர் 5 பேருக்கு தொற்று இருந்தது. இதே பள்ளியைச் சேர்ந்த மேலும் 2 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி நேற்று மூடப்பட்டது.

தமிழகம் முழுவதும் இதேபோல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் மூடப்படுமா அல்லது தொடர்ந்து இயக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை!

0

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் இரவு 7 மணி வரை இருப்பதை மாலை 6 மணியாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர்.

புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் வார்டு வரையறை உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இங்கு தேர்தல் நடத்த தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடந்தது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு ஆலோசனைகளை கூறி உள்ளனர். குறிப்பாக, 9 மாவட்டங்களிலும் நேர்மையாகவும், நியாயமாகவும், , வெளிப்படை தன்மையுடனும் தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் உறுதுணையாக இருக்கும், அதேநேரம் 9 மாவட்டங்களிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அவற்றில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அதேபோல் ஒரு சில வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை என்பது தேவையில்லை. மாறாக காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மட்டும் போதுமானது என்று கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு நடப்பில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களைக் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும்.

கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டவாறு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் அதற்கான ஒத்துழைப்பினை அனைத்து அரசியல் கட்சிகளும் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

துண்டிக்கப்பட்ட சிக்கிம் மாநிலம் நிலச்சரிவால் பாதிப்பு!

0

சிக்கிம் மாநிலத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவின் காரணமாக அம்மாநிலம் நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 10 நாட்டின் பிற பகுதிகளுடன் சிக்கிம் மாநிலத்தை இணைகிறது. அந்த மாநில எல்லையான ரங்கோ பூமியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்தமுறை பெய்த மழை காலங்களில் மட்டும் சுமார் நான்கு முறை நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 60 மீட்டர் நீளத்திற்கு மழை சாலை மற்றும் பாறைகள் சாலைகளின் நடுவே விழுந்து போக்குவரத்து உள்ளது.

இதனால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சிக்கிம் துண்டிக்கப்பட்டுள்ளது அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

மலைப்பிரதேசமான சிக்கிம் மாநிலம் இந்தியாவிலேயே குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட இயற்கை எழில்மிகு மாநிலம் என்பதால் அப்பகுதிக்கு மக்கள் ஆர்வமாக சுற்றுலா சென்றுவரும் நிலையில் இதுபோன்ற நிலச்சரிவுகள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது.

கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

0

உலகிலேயே முதல் முறையாக 2 வயதிற்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடத்தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கியூபாவில் தொடங்கியுள்ளது. அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12-வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடும் பணியை கியூபா தொடங்கியது. இந்த சூழலில், நேற்று முதல் 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. கியூபாவின் மத்திய மகாணமான சியன்பியூகோஸ் பகுதியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளது.

சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தாலும், கியூபாவில் முதன் முறையாக போடப்பட்டுள்ளது. கியூபாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் கியூபா பல நாடுகளுக்கு முன்னுதாரனமாக இருந்துவருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே ஒப்பிடும்போது கொரோனா உயிரிழப்புகள் சதவீதம் கியூபாவில் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது.

கபில் தேவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய பும்ப்ரா!

0

டெஸ்ட் போட்டியில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து கபில்தேவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது.

இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் விக்கெட்டை பும்ரா எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும்.

மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேக பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதேபோல், இர்பான் பதான் 28 போட்டியிலும், முகமது ஷமி 29 போட்டியிலும், ஜவகல் ஸ்ரீநாத் 30 போட்டியிலும், இஷாந்த் சர்மா 33 போட்டியிலும் 100 விக்கெட்கள் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 100 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் 18 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்து அஸ்வின் முதலிடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்திய அணி சமீபத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மிகப்பெறும் பலமாக பும்ப்ரா திகழ்ந்து வருகிறார்.

ஓவல் டெஸ்ட் :இந்தியா அபார வெற்றி!

0

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 290 ரன்கள் குவித்தது.
இதனால் முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி
இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

கிரிக்கெட் விமர்சகர்கள் இங்கிலாந்து எளிதில் வெற்றிபெறும் என கணித்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில்
களமிறங்கிய இந்தியா நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். ஓப்பனர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிலைத்து ஆடிய ரோகித் சர்மா, சதம் விளாசினார். அவர் 256 பந்துகள் விளையாடி 127 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சார்பில் செத்தேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட், ஷிராதுல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 466 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 368 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. நேற்று 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்தது.

ஆனால், இன்று ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.

இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் கண்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தியபோதும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி ஆகியோர் முறையே 5, 0, 0 ஆகிய ரன்களில் வெளியேறியது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

இந்தியாவுக்காக உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.முடிவில் இந்திய அணி, 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 10 ஆம் தேதி மான்சஸ்டரில் தொடங்குகிறது.