அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

0
61

சென்னையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சுவாசக் கோளாறு காரணமாக, சென்ற மாதம் 20ஆம் தேதி சேர்க்கப்பட்டார் சென்ற மாதம் 20 ஆம் தேதியில் இருந்து அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக ,பாதிக்கப்பட்ட அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றைய தினம் மாலை மூன்று முப்பது மணி அளவில் இயற்கை எய்தினார். இதனை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அத்துடன் அவருடைய உடல் சென்னை தண்டையார்பேட்டையில் இருக்கின்ற அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. அவருடைய உடலுக்கு அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதோடு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை வீட்டில் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன், உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அஞ்சலி செலுத்திய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மற்றும் மதுசூதனனின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.