மனம் கமலும் மனோரஞ்சிதம் பூ!! இந்தச் செடி உங்கள் வீட்டில் இருந்தால் பணம் கொட்டும்!!

0
859
#image_title

மனம் கமலும் மனோரஞ்சிதம் பூ!! இந்தச் செடி உங்கள் வீட்டில் இருந்தால் பணம் கொட்டும்!!

நம்முடைய வீட்டில் வளர்க்கும் செடிகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். சில செடி கொடிகளை பார்த்தலே ஒருவித அமைதி பரவும். சில செடிகள் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியவை. செல்வ வளத்தை தரக்கூடியவை. நம்முடைய வீட்டில் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம். எந்தெந்த செடிகளை வளர்க்கக் கூடாது என்று வாஸ்து ரீதியாக கூறப்பட்டுள்ளது.

மகாலட்சுமி நிலை வாசலுக்குள் நிலையாக வருகை தர வேண்டும் என்றால் உங்கள் வீட்டு வாசல் பகுதியில் மனோரஞ்சித செடியை வளர்க்க வேண்டும். மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான இந்த செடியை உங்கள் நிலை வாசலில் நட்டு வைத்து தான் பாருங்கள். மகாலட்சுமியின் வருகையை நீங்களே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. இது தவிர உங்கள் வீட்டிற்கு வரும் எதிரிகள் கூட இந்த செடியை பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது உங்களுடைய நண்பர்களாக மாறிவிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு வசிய தன்மை கொண்ட செடி தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

இறைவனை வழிபாடு செய்வதில் மலர்களே முதலிடம் பெறுகின்றன. ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனி சிறப்பாம்சம் உள்ளது. அழகிலும், நறுமணத்திலும் மலர்கள் தனிதனி இடம் பெறுகின்றது. அலங்காரத்திற்கும், திருமணத்திற்கும், திருவிழாக்களுக்கும் என பல்வேறு நிகழ்வுகளுக்கென மலர்கள் வகைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆனால் பூஜைக்கென்றே சிறப்பாக வளர்க்கப்படும் தாவரம் “மனோரஞ்சிதம்” தான்.. தேவர்களால் இறைவனுக்கு பூஜிக்கப்படும் மலர் மனோரஞ்சிதம் மலர்தான்.

author avatar
Selvarani