சிறையில் குடும்பம் நடத்திய எம்எல்ஏ! போலீஸ் சூப்பிரண்டு  செய்த அதிரடி செயல்!

0
230
#image_title

சிறையில் குடும்பம் நடத்திய எம்எல்ஏ! போலீஸ் சூப்பிரண்டு  செய்த அதிரடி செயல்!

சிறைக்குள் சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய எம்எல்ஏ வை போலீஸ் சூப்பிரண்டு உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் முக்தார் அன்சாரி. இவர் மவு தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மீது 30 வழக்குகள் உள்ள நிலையில், கிருட்டிணானந்த் ராய் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்தார் அன்சாரிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபட்டு சிறையில் உள்ளார். 

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்தவரான அப்பாஸ் அன்சாரி என்பவர் தேசிய அளவிலானப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தற்போது இவர் பாரதிய சுஹல்தேவ் சமாஜ்வாதி என்ற கட்சி சார்பில் எம்.எல்.ஏவாக உள்ளார்.தந்தையை போலவே குற்றப்பின்னணி கொண்ட இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இவருடன் சிறையில் இவரின் மனைவி நிக்கத் பானு என்பவர் சட்டவிரோதமான தங்கி உள்ளார். மேலும் நிக்கத் பானு சிறை பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடாமல் சிறை சூப்பிரெண்டு அசோக் சாகரின் உதவியுடன் அவரின் சிறை அறையில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாக சித்ரகுட் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பிருந்தா சுக்லாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவல் கிடைத்ததும் அவர்களை மடக்கி பிடிக்க முடிவு செய்தார் பிருந்தா சுக்லா. அதன் படி சித்தரகுட் கலெக்டர் அபிஷேக் ஆனந்துடன் ரகசியமாக தனியார் வாகனத்தில் சிறைக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார். பின்னர் சிறை சூபிரெண்டு அசோக்கின் அலுவலக அறைக்கு சென்றபோது அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. 

கதவை திறந்து உள்ளே சென்றுபார்த்தபோது கைதி அப்பாஸ் அன்சாரி தனது மனைவி நிக்கத் பானுவுடன் அங்கு தங்கி இருந்தார். மேலும், மனைவியின் தொலைபேசி மூலம் தனது வழக்குகளின் சாட்சிகளையும் மிரட்டி வந்ததுடன், பணம் பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சிறையில் அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடியாக செயல்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு பிருந்தா சுக்லாவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச சிறைத்துறையின் அவலத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து  உள்ளனர்.