சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

0
97

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சபரி (33). இவர் தனியார் மில்லில் ஊழியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரளா (28). இவர்களுக்கு ஏழு வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரளா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். மேலும் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை அடுத்து அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே குறை பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் இவரது மகன் சர்வேஷ் தந்தை சபரியுடன் தங்கி பள்ளிக்குச் சென்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாலப்பட்டியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்த சரளா தனக்கு குறைப்பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தை பிறந்ததாகவும் கூறி அழுதுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை சபரி எழுந்து வீட்டில் பார்த்தபோது இரண்டு குழந்தைகளுடன் சரளா காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சபரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரளாவையும் அவரது இரண்டு குழந்தையும் தேடியுள்ளார்.

இந்நிலையில் கிணற்றில் சரளாவின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத்துறையின் உதவியுடன் கிணற்றில் இருந்த சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் சரளாவிற்கு குறை பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று அதிக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மனம் உடைந்த சரளா அவரது இரட்டைக் குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

மேலும் இதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இரட்டைக் குழந்தைகளும் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

author avatar
Parthipan K