‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் – காமெடி கலந்த கதைக்களம்!

0
150
#image_title

‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் – காமெடி கலந்த கதைக்களம்!

நடிகை நித்யாமேனன் கடந்த 2006ம் ஆண்டு கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். முன்னணி நாயகர்களுடன் நடித்தாலும் தனது நடிப்பினை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் இவர். தற்போது தமிழில் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் காதல் தோல்வியடைந்த அதாவது ‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாப்டர் மீடியா மற்றும் பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தினை விஷ்ணுவர்தனின் உதவி இயக்குனரான காமினி எழுதி இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேண்டஸி ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்த கதைக்களம் கொண்ட இப்படத்தில் தீபக் பரம்போல், வினய் ராய், பிரதீக் பாப்பர், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் இயக்குனர் காமினி இது குறித்து ஓர் ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‘வழக்கமாக ஆண்களின் காதல் தோல்வி குறித்து மட்டுமே திரைப்படங்கள் பேசுகிறது. ஆனால் இதில் ஒரு பெண்ணின் காதல் தோல்வி குறித்த கதை பேசப்படவுள்ளது’ என்று கூறியுள்ளார். மேலும், ‘சமுதாயத்தில் இருக்கும் வழக்கமான நடைமுறைகளை உடைக்கும் விதமாக இப்படத்தில் நித்யா மேனனின் கதாபாத்திரம் அமையும்’ என்றும் கூறியது குறிப்பிடவேண்டியவை ஆகும்.