பெற்றோர்களே உஷாராக இருங்கள் ! மீண்டும் தாண்டவம் ஆடுகிறது கொரோனாவின் பிஏ5 வகை!!

0
67

பெற்றோர்களே உஷாராக இருங்கள் ! மீண்டும் தாண்டவம் ஆடுகிறது கொரோனாவின் பிஏ5 வகை!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பல மாநிலங்களில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனோவில் இருந்து மக்கள் சற்று பழைய நிலைக்கு வந்த நிலையில் பள்ளிக் குழந்தைகளும் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றார்கள்.

பல நாட்களுக்கு கழித்து குழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கின்றார்கள். இந்நிலையில் ஒரு பக்கம் உருமாறியா கொரோனா வைரஸ் தொற்று படையெடுத்து ஓமைக்ரான் தொற்றாக மாறியது.

இந்த வகை தொற்று பிஏ ஐந்து வகை வைரஸ் தொற்றாக உருமாறி உலகில் பரவி வருகிறது. இவ்வகை வைரஸ்கள் ஐந்து வயது குழந்தைகளை தாக்குவதாக கூறப்பட்டுள்ளது. இந்த வகை காய்ச்சலுக்கு தக்காளி காய்ச்சல் நோய் என கண்டறியப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கியில் நெடுங்கண்டம் கல்லார் பகுதியில் இயங்கிவரும் தொடக்கப் பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் 20 குழந்தைகளுக்கு மேலாக தொடர்ந்து காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குழந்தைகளை சுகாதாரத் துறையினர் மூலம் பரிசோதனை செய்தார்கள். பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டார்கள்.

மேலும் தக்காளி காய்ச்சல் தொற்றில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் குழந்தைகளின் பெற்றோர் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.

author avatar
Parthipan K