கொரோனா வைரஸை அலட்சியப்படுத்திய மக்கள்! பிரதமர் மோடி கவலை

0
73

கொரோனா வைரஸை அலட்சியப்படுத்திய மக்கள்! பிரதமர் மோடி கவலை

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மிகவும் அலட்சியப்படுத்துவது பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் யாரும் மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கைகளை பின்பற்றவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதன் தீவிரத்தை யாரும் உணராமல் அலட்சியமாக மக்கள் வெளியே செல்கின்றனர் தயவு செய்து வெளியே செல்லாமல் உங்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். மக்கள் உரிய நடவடிக்கையை பின்பற்ற மாநில அரசுகள் மிகவும் கடுமையாக்க வேண்டும் இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

author avatar
Parthipan K