பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி!

0
178
#image_title

பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி!

இன்று நாடு முழுவதும் “ராமர்” பெயர் மட்டுமே உச்சரிக்கப்பட்டு வருகிறது. அந்தளவிற்கு அயோத்தி ராமர் கோயில் புகழ்பெற.. அவை உருவான பின்னணியே காரணம். அது மட்டும் இன்றி பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அடங்கும்.

இதனால் பாஜக.. ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்கிறது.. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இந்துமக்களை கவரும் விதமாக இவ்வாறு செய்கிறது என்ற விமர்சனம் பாஜக மீது விழுந்து இருக்கிறது.

இந்நிலையில் இன்று நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்லாயிரக் கணக்கான வி.ஐ.பிகள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டதால் அயோத்தி விழாக் கோலம் பூண்டது. விழாவில் பிரதமர் மோடி ராமர் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் ராமர் வழிபாடு பொய்யானது… அவர் ஒருமுறை கூட ராமரை பின்பற்றியது இல்லை… தனது 10 வருட ஆட்சியில் ஒருமுறை கூட ராமரை போல் ஆட்சி செய்ததில்லை… சொல்லப்போனால் ராமர் அவரது மனைவியிடம் நடந்து கொண்டது போல்.. பிரதமர் அவரது மனைவியிடம் நடந்து கொள்ளவில்லை.. என்று பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்து இருக்கிறார்.

எப்பொழுதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் சுப்பிரமணியன் சுவாமி அவர்களின் பிரதமர் மோடி குறித்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கின்றது. பிரதமர் மோடி சரியாக ஆட்சி செய்யவில்லை என்று பாஜகவில் உள்ளவரே இவ்வாறு கூறுவது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.