பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!!

0
102
#image_title

பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!!

பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் 33வது வார்டில் கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் பொழுது குடிநீர் குழாய்கள் உடைந்தது. இதனால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. மக்கள் பலரும் குடிநீர் கிடைக்காததால் அவதிப்பட்டனர்.

தற்போது 33வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. இதையடுத்து பழுதடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணியில் நகராட்சி அரசு இறங்கியுள்ளது.

குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணியை நகராட்சி அலுவலர் சண்முகப்பிரியா, சதீஷ், நகராட்சி அலுவலர்கள் பலரும் ஆய்வு செய்தனர்.