ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!

0
35
#image_title

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்

தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா – வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி அதிரடியாக 5 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்க ரோஹித் சர்மா திட்டமிட்டிருக்கிறாராம்.

சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடக்கூடியவர்தான். கடந்த டி20 போட்டிகளில்தன்னுடைய திறமையை காட்டி தனித்துவம் பெற்றார். அவர் அடிக்கும் பேட்டிங்கை குறை சொல்ல முடியாது.

சமீப காலமாக சூர்ய யாதவ் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒருவேளை உலகக்கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை களமிறக்க ரோஹித் ஏதாவதுதிட்டம் போட்டுள்ளாரா என்று ரசிகர்கள் நினைத்துள்ளனர்.

இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. இன்று நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி பயிற்சி ஆட்டமாக மாற்றி பயன்படுத்த திட்டமிட்டு 5 மாற்றங்களை செய்துள்ளார் ரோஹித் சர்மா.

இப்போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் என்று 5 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளார். அவர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா அணியில் ஆடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோலிக்கு ஓய்வு கொடுத்ததை அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

 

 

author avatar
Gayathri