ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

0
136
School student tragically died in Erode district! The people of the area are sad!
School student tragically died in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் வில்லசரம்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மகன் ஹேமச்சந்திரன் (12). மாணிக்கபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டிற்கு நேரமாக வந்துவிடுவார் ஆனாலும் அன்று வெகு நேரமாகியும் ஹேமச்சந்திரன் வீடு திரும்பவில்லை அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் படிக்கும்  பள்ளிக்குச் சென்று கேட்டபோது அவர் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவர் வீட்டுக்கு வராததால் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த பல்வேறு இடங்களில் தேடினார்கள்  ஆனால் எந்த இடத்தில் தேடியும் கிடைக்காததால் பதற்றம் அடைந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாரில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஈரோடு போலீசார் ஹேமச்சந்திரனை பல்வேறு இடங்களில் தேடினார்கள். இந்நிலையில் கருவில்பாறைவலசு பகுதியில் உள்ள குளத்தின் அருகே ஒரு மாணவன் பள்ளி சீருடையுடன் சடலமாக  கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது அந்த தகவலின் பெயரில் போலீசாரம் ஈரோடு தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு நேற்று முன்தின  இரவு சென்றனர்.

அதனையடுத்து  தீயணைப்பு  படை வீரர்கள் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தனர் வெகு நேரம் தேடுவதற்கு பின்னர் நல்லறவு ஒரு மணி அளவில் இறந்த நிலையில் மாணவன் ஹேமச்சந்திரன் உடல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடுஅரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பள்ளி முடிந்ததும் ஹேமச்சந்திரன் கருவில்பாறைவலசு பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார் அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு அவர் சென்றதால் நீரில்  மூழ்கி இறந்தார் எனவும் தெரியவந்தது. மேலும்  மாணவனின்  உடலை பார்த்து பெட்ரோல் மற்றும் உறவினர்கள் கதறி அழுததை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர் . குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த  சம்பவம் அந்த பகுதியில்   பெரும் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K