“சீமான் சார் நல்லா இருக்கணும்” : அந்தர்பல்டி அடித்த நடிகை விஜயலட்சுமி!!

0
80
#image_title

“சீமான் சார் நல்லா இருக்கணும்” : அந்தர்பல்டி அடித்த நடிகை விஜயலட்சுமி

இயக்குனரும், நடிகருமான சீமான் அவர்கள் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் விஜயலட்சுமி உடன் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது அவர்கள் அளித்த பேட்டியில், சீமான் மீது ஏற்கெனவே புகார் அளித்தோம். அப்போது அதிமுக எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும், சீமான் மீது அதிமுகவினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்கள், மேலும் கட்டாயப்படுத்தி 6 முறை எனக்கு சீமான் கருகலைப்பு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் இந்த வடக்கு வீசின விசை விசாரணை நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி அவர்களிடம் பேசாமல் நடத்தப்பட்டது மேலும் அவருக்கு மருத்துவ ஆனந்த சோதனையும் மேற்கொள்ளப்பட்டது எடுத்து சீமான் அவர்களிடமும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக படி உத்தரவு தெரிவிக்கப்பட்டது அதன்படி இது அன்னை சீமான் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதிகளில் கேள்விக்கு விளக்கம் அளித்தார் ஊடகங்களையும் பத்திரிகைகளும் தொடர்ந்தது 2 பாரமாகத் தொடர்ந்து இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனுவை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை” என்று நடிகை விஜயலட்சுமி கூறினார்.

“புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை என்று தெரிவித்தார். ‘சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை” என்றும் – நடிகை விஜயலட்சுமி வேதனை தெரிவித்தார்.

இதற்கெல்லாம் மேலாக “சீமான் சார் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்” என்றும் நடிகை விஜயலட்சுமி கூறியது, சற்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இனி நான் சென்னைக்கு வரப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறியதும் கவனிக்கத்தக்கது. சீமான் விவரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது இது தற்காலிகம் தானா? இல்ல மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா? என்று அரசியல் வட்டாரங்களில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

 

author avatar
Parthipan K