ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன் …. பின்னணி என்ன?

0
141

ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன் …. பின்னணி என்ன?

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தர்பார் மற்றும் அண்ணாத்த என அடுத்தடுத்து தொயர் தோல்விகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் ரஜினி உடனடியாக ஒரு  வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால்  இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அடுத்து அவர் லைகா நிறுவனத்துக்காக தொடர்ந்து 2 படங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படத்தில் ஒரு படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா இயக்கும் இயக்க உள்ள படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில்தான்  நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த முதலில் நடிக்க தயங்கிய ரஜினிகாந்த் மகளின் வற்புறுத்தலால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடிக்க சிவகார்த்திகேயனைதான் ஐஸ்வர்யா அணுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் அடுத்தடுத்து தனது ஒத்துக்கொண்ட படங்களை முடிக்க வேண்டியுள்ளதால் இந்த பட வாய்ப்பை நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர்தான் இந்த படத்தின் ஹீரோ வாய்ப்பு அதர்வாவுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. பரதேசி படத்துக்குப் பிறகு ஒரு பெரிய பிரேக் கிடைக்காமல் அதர்வா தடுமாறி வருகிறார். அது இந்த படத்தின் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளது.