சூர்யாவை அந்த விஷயத்திற்காக திட்டித் தீர்த்த சிவக்குமார் – ஷாக்கான ரசிகர்கள்!

0
119
#image_title

சூர்யாவை அந்த விஷயத்திற்காக திட்டித் தீர்த்த சிவக்குமார் – ஷாக்கான ரசிகர்கள்!

எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார்.

அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். 3 முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’, 3 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, 4 முறை ‘விஜய் விருது’ என பல விருதுகளை வென்றுள்ளார்.

சமீபத்தில் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், கோர சம்பவம் ஒன்று நடைபெற்றது.

அதாவது, நடிகர் சூர்யாவுக்கு பேனர் வைக்கும்போது 2 பேர் உயிரிழந்து விட்டனராம். அந்த பேனரில் வருங்கால முதல்வர் சின்னவர் சூர்யா வாழ்க என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பேனரைப் பார்த்த சினிமாத்துறையினரும், அரசியல் தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைப் பார்த்த நடிகர் சிவக்குமார், சூர்யாவைக் கூப்பிட்டு பயங்கரமாக கத்த திட்டியுள்ளார். ரசிகர் கூட்டத்தை கண்டிக்க வேண்டும் இல்லையென்றால் நன்றாக இருக்காது என்று சிவக்குமார் சூர்யாவை கடித்திருக்கிறார்.

இதனையடுத்து, நடிகர் சூர்யா தனது ரசிகர்களை அழைத்து இனி யாரும் பேனர், போஸ்டர்களையெல்லாம் ஒட்டக்கூடாது என்று அட்வைஸ் செய்துள்ளார்.

author avatar
Gayathri