தமிழகத்தில் தடைபடுமா தீபாவளி கொண்டாட்டம்?

தமிழகத்தில் தடைபடுமா தீபாவளி கொண்டாட்டம்?

தமிழ்நாட்டில் மிக கோலாகாலமாக கொண்டாடப்படும் விழாக்களில் தீபாவளி கொண்டாட்டம் மிக முக்கியமான ஒன்று. புத்தாடை, பட்டாசு, சொந்த ஊருக்கு செல்வது, புதுப்படம், பலகாரம் என ஒரு வாரத்திற்கு முன்பே தீபாவளி களைகட்டி விடும். இம்முறை வார இறுதி நாளில் தீபாவளி வர இருப்பதால், பல பகுதிகளில் சுய காரணம் கருதி தங்கி இருப்பவர்கள் கூட தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக தமிழக அரசும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்குகின்றன. … Read more

BREAKING:வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து-உயர் நீதிமன்றம் உத்தரவு.

BREAKING:வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து-உயர் நீதிமன்றம் உத்தரவு.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10‌.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட சாதியினை சேர்ந்தோர் வழக்கு தொடர்ந்தனர். அதில் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இதில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது … Read more

தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.!!

தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.!!

தமிழகத்தின் கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் 2-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை … Read more

கனமழை காரணமாக இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பு!

கனமழை காரணமாக இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பு!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும், இது அடுத்த 3 நாட்களுக்கு மெதுவாக மேற்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வரும் மூன்றாம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள் … Read more

BREAKING: சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.268 உயர்வு.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

BREAKING: சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.268 உயர்வு.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது .அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. … Read more

தீபாவளி சிறப்பு பேருந்து சேவை.. இன்று முதல் துவக்கம்.!!

தீபாவளி சிறப்பு பேருந்து சேவை.. இன்று முதல் துவக்கம்.!!

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி 20,334 அரசு பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் 3-ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2100 … Read more

மேட்டூர் அணைக்கு குறைந்தது நீர்வரத்து! விவசாயிகள் கவலை!

மேட்டூர் அணைக்கு குறைந்தது நீர்வரத்து! விவசாயிகள் கவலை!

தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது காவிரி நதி தான், அந்த காவிரி ஆற்றில் நீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் முடங்கிப் போகும் ஒரு நிலை இருக்கிறது. அப்படி காவிரியாற்றில் நீர் திறந்து விட வில்லை என்றால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி விடுவார்கள், அப்போதெல்லாம் விவசாயத்திற்கு கைகொடுத்தது சேலம் மாவட்டம் மேட்டூர் கிராமத்தில் இருக்கக்கூடிய மேட்டூர் அணை தான். இந்த … Read more

BREAKING: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு.!!

BREAKING: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு.!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன் காரணமாக, மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல தயாராக உள்ளனர். … Read more

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!! இன்றைய விலை நிலவரம்.!!

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

நேற்று, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு தனித்து உருவான நவம்பர் 1 ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு நாள்’ ஆக கொண்டாடப்பட வேண்டும். … Read more