ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற போது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்திலஉ் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி … Read more

OPS – சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

OPS - சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவர்களுக்கும் இடையே சசிகலா வி‌சயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், சசிகலா அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் சசிகலா. தான் தான் அ.தி.மு.க … Read more

Breaking: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

Breaking: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

மத மோதலை உருவாக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வந்த பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு விட்டதாக கடந்த அக்டோபர் 16-ம் தேதி பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று பாஜக … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா!

Apollo should not interfere in this! Tamil Nadu government's action argument!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளது. அவர் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாதபோது அனுமதிக்கப்பட்ட திலிருந்து அவர் மரணம் வரை பல சர்ச்சைகள் எழுந்து வண்ணமாகவே இருக்கிறது. அது குறித்து இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது. அவ்வாறு ஜெயலலிதா அம்மாவின் மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி … Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்கு இன்ப செய்தி!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்கு இன்ப செய்தி!

பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் இரயில்களில், நவம்பர்-1 முதல் அன்ரிசர்வ்டு பெட்டிகளையும் இணைத்து இயக்க இரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் கொரோனா முதல் அலை பரவல் தீவிரமடைந்த காரணத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பிறகு முதல் பரவல் தொற்று பாதிப்பு குறைந்து விட்டதால் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ரிசர்வ்டு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கி வந்தது தெற்கு இரயில்வே. இந்நிலையில், தற்போது … Read more

தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சூப்பர் அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சூப்பர் அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏழை எளிய மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை காலை … Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்!

Good news for train passengers! Also running from November 1st!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் வெளியூரில் வேலை செய்பவர்கள் பண்டிகை தினத்தையொட்டி தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். இறுதி நேரத்தில் கூட்டம் அலைமோதுவதை … Read more

பெண்களுக்கு இனி ‘புதிய ரேஷன் கார்டு’- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

பெண்களுக்கு இனி 'புதிய ரேஷன் கார்டு'- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

கணவனால் கைவிடப்பட்ட அல்லது மறுவாழ்வு முடிவுற்று தனியாக வசிக்கும் பெண்கள் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் போது நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க வலியுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முடிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள காரணத்தாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று … Read more

மதிமுக வில் மீண்டும் நாஞ்சில் சம்பத்?

மதிமுக வில் மீண்டும் நாஞ்சில் சம்பத்?

நாஞ்சில் சம்பத் முதன் முதலாக மதிமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே இருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகினார். பின்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக வில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டு அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவி ஏற்றதுடன் இன்னோவா காரையும் பெற்றார். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவையும் ஆதரித்து பேசி வந்தார். பின்னர் தினகரனிடமிருந்து … Read more

தமிழகத்தில் பருவமழை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.!!

தமிழகத்தில் பருவமழை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தற்போது வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் நேற்று முதல் தொடங்கியது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி, குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகின்றன. அத்துடன் சென்னையில் மழை நீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு, அதற்கென தனித் தனியாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் ‌. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. … Read more