தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 119 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த … Read more

காட்டு யானை தாக்கியதில் வீடு சேதம்:? அச்சத்தில் அப்பகுதியினர்?

காட்டு யானை தாக்கியதில் வீடு சேதம்:? அச்சத்தில் அப்பகுதியினர்?

கூடலூரை அடுத்துள்ள புளியம் பாறை பகுதில்,நேற்று முன்தினம் நள்ளிரவில் இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் வலம் வந்துள்ளது.மேலும் அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி கொண்டிருந்ததை கண்டு அப்பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணியம் என்பவர் அலைபேசியின் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு தகவல் அளித்துள்ளார். அப்பொழுது திடீரென்று இரண்டு காட்டு யானைகளில், ஒன்று பாலசுப்பிரமணியனின் வீட்டு சுவற்றை இடித்து உள்ளது.இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து உள்ளே விழுந்தது.இதனால்,மிகவும் பயந்து போன பாலசுப்பிரமணியனின் குடும்பத்தார் வேறொரு அறையில் … Read more

சிவகாசி வெடிஆலையில் வெடி விபத்து?

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவும் சீனாவும் தற்போது மோதலில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையின் காரணமாக சீன செயலிகளை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதுபோலேவே நேபாளமும் இந்தியாவை அடிக்கடி சீண்டி வருகிறது. நேபாள பிரதமர்  ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என  சர்ச்சையான கருத்தை கூறிவந்தார். தற்போது சீனாவும் நேபாளமும்  ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என சீன கூறியுள்ளது. நேபாளத்துடன் சீனா நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரும் … Read more

கரும்பு விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஐ.டி இளைஞர்

கரும்பு விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஐ.டி இளைஞர்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தியானேஸ்வரன் (29).இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பினை முடித்து விட்டு பெங்களுரில் பிரபலமான ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்.தற்பொழுது கொரோனா ஊரடங்கால் வொர்க் பிரம் ஹோம் (work from home)செய்து வருகிறார்.வேலை பார்த்த பின்பு பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் விவசாயத்தில் இறங்கினார் தியானேஸ்வரன். இவர் பாரம்பர்யமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கூறுகையில், கடந்த ஆறு மாதமாக வீட்டில் இருப்பதாகவும் பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் … Read more

அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு இன்று விசாரித்து. அவர்கள் அரசியல் பின்புலத்துடன் ரவுடிகள் பலர் புதுச்சேரியில் உலா வருவதாக தெரிவித்தனர். மேலும் ரவுடிகள் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது நாட்டிற்கே துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் … Read more

“Son of MLA” காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்:! கலாய்த்துதள்ளும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்!

"Son of MLA" காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்:! கலாய்த்துதள்ளும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்!

பொதுவாகவே அரசியல்வாதிகளும் பிரபலங்களும் சமூகத்தில் தனியாகத்தான் தெரிவர்.அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கவனிப்பே தனியாகத்தான் இருக்கும். இந்நிலையில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு காரில் பின்புறக் கண்ணாடியில் ஒருவர் சன் ஆப் எம்.எல்.ஏ (son of MLA) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் காரின் புகைப்படம் தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் புகைப்படத்திற்கு மேல் இதுதான் இதுதான் நமது கலாச்சாரம் என்று … Read more

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்துவருகிறது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்து வருகிறது. என்று கிராமிற்கு 28 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 224 … Read more

“சித்த, யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு” எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி?

"சித்த, யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு" எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி?

ஆரம்ப கட்டத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது அவர் முறையாக சித்த மருத்துவம் பயிலவில்லை இதுபோன்று பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்க்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை … Read more

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை?

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை?

தமிழகத்தை பொருத்தவரையில் வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும்.விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு வாரத்திற்க்கு முன்பிலிருந்தே,விநாயகர் சிலையை வாங்க ஆரம்பித்து விடுவர்.மேலும் விநாயகர் சதுர்த்தியிலிருந்து,3,5,7நாட்கள் என பூஜை செய்து பின்பு பவானி ஆறு,காவிரி ஆறு,போன்ற சிறப்புமிக்க நீர்நிலைகளில் கரைத்துவிட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில், கொரோனா பரவுதலை கருத்தில்கொண்டு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. … Read more

கொடுத்த வாக்குறுதியை மீறி மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss

காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப்பாதை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. காவிரி பாசனப்பகுதியில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் உழவர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. உழவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் விவசாயத்தை அழிக்கும் நோக்குடன் கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்ப்பாதை … Read more