காதலனின் தந்தை மிரட்டல்! அவமானத்தால் தீக்குளித்து பலியான காதலி

காதலனின் தந்தை மிரட்டல்! அவமானத்தால் தீக்குளித்து பலியான காதலி

ஆரணியில், காதலனின் தந்தை மிரட்டியதால் அந்தப்பெண் அவமானம் தாங்க முடியாமல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகள் வெண்ணிலா (வயது 19). இவர் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவரின் மகன் தான் பிரசாந்த் (வயது 24). வெண்ணிலாவும், பிரசாந்தும் கடந்த ஓராண்டிற்க்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இதனை தெரிந்துகொண்ட நாகராஜ், ஆத்திரமடைந்து கடந்த 21ஆம் தேதி … Read more

சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்து போன சம்பவம்!!

சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்து போன சம்பவம்!!

        நாடு முழுவதும் பொது முடக்கம் நிலவி வரும் சூழலில், விரக்தியில் சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கவில்லை என்பதால், கடும் விரக்தியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேர் சானிடைசர் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கொரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கத்தினை ஒவ்வொரு மாநிலமும் … Read more

செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழை

செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழை

வருகின்ற செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். கடந்த ஜூன் மாதம் முதல் நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கியது, அதன் பின்னர் நாளுக்கு நாள் மழை அதிகாகமாக பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் 13 % மேலாக மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகின்றது. மேலும் வடமாநிலங்களை பொறுத்தவரை மழைக் குறைந்துள்ளது, மத்திய இந்திய பகுதியில் 3% மழை குறைந்து … Read more

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பச்சை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிர்ச்சி தகவல்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை கட்சியில் கொண்டு அவரது கொள்கைப்படி செயல்பட்டு வரும் அ.தி.மு.க., மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கையைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமல் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அம்மையாருக்கும் சேர்த்தே துரோகம் செய்யத் துணிந்துவிட்டதா?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சகட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. … Read more

மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன? மு.க.ஸ்டாலின்!

மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன? மு.க.ஸ்டாலின்!

அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது இந்த புதிய கல்விக் கொள்கையில், கல்வியில் “மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது.இந்த புதிய கல்விக் கொள்கையை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றும்,எதிர்த்து வரும் நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கை மற்றும் அதில் உள்ள மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக … Read more

முன்னாள் முதல்வர்களுக்கு கார் ஓட்டிய குமாரசாமி மர்மச்சாவு?

முன்னாள் முதல்வர்களுக்கு கார் ஓட்டிய குமாரசாமி மர்மச்சாவு?

தமிழக முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற குமாரசாமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அணை மேடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.இவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தார்.இவர் தமிழகத்தின் முதல்வர்களான எம்ஜிஆர்,கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து உள்ளார்.பணி ஓய்வு பெற்ற பின்னர் அவருடைய சொந்த ஊரான வாழப்பாடியில் செட்டிலாகிவிட்டார்.தற்போது அவருக்கு 67 … Read more

ஆகஸ்ட் 3 முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள்: சாத்தியமா?

ஆகஸ்ட் 3 முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள்: சாத்தியமா?

அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது அனைத்து கல்லூரிகளுக்கும் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளே இல்லாதபொழுது எப்படி சாத்தியமாகும்?   தமிழகம் முழுவதும் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதலே கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது, … Read more

சசிகலா கை காட்டும் ஆளே அடுத்த முதல்வர்:?பிரபல ஜோதிடர் கணிப்பு!

சசிகலா கை காட்டும் ஆளே அடுத்த முதல்வர்:?பிரபல ஜோதிடர் கணிப்பு!

சசிகலாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவரை கைது செய்தனர்.பின்பு அவருக்கு 10கோடி ரூபாய் அபராதமும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது அந்த நான்கு ஆண்டுகாலம் முடியவிருக்கும் நிலையில் சசிகலா சிறைவாசத்தில் இருந்து வெளிவர இருக்கிறார்.இதற்காக பெங்களூரில் ஜோராக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஜெயலலிதா அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற போது அவர் ஆட்சியில் உட்கார மாட்டார் மருத்துவமனை, சிறைச்சாலையில் தான் இருப்பார் என்று கணித்து சொன்னவர் பிரபல ஜோதிடர் … Read more

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 21 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டல்!!

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 21 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டல்!!

தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் 247.9கோடி மதிப்பீட்டிலான 21 நீர்வள மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் வளைய சித்ரா கிராமத்தில் உள்ள பாலாற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது.தற்போது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆறாவதாக ரூ 42.2கோடி மதிப்பீட்டிலான தடுப்பணைக்கும்,கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்டரக்கோட்டை கிராமத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் … Read more

சிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!

சிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!

மயிலாப்பூரில் சிறுமி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: மயிலாப்பூர், கணேசபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவரது மனைவி மலர்விழி (வயது 38). இவர்களுக்கு, 16 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கணேசனும் மலர்விழியும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், இருவரும் பணிக்கு சென்றிருந்த நிலையில், அக்கா, தங்கை இடையே, ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தங்கை, கவிப்பிரியா, தனது … Read more