கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியல் போராட்டம்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியல் போராட்டம்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியல் போராட்டம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக உள்ள நிலையில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனை கட்டிடங்கள் போதுமானதாக இல்லை.இதனால் சில பள்ளிகள் கல்லூரிகள் சிகிச்சைக்கான வசதிகள் செய்யப்பட்டு அங்கு தொற்றுப் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கொரோனாத் தொற்று மற்றும் அறிகுறிகளுடன் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களளை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் சிலர் … Read more

அரசு கலைஅறிவியல் கல்லூரியில் சான்றிதழ் பதிவேற்றம் எப்போது??

அரசு கலைஅறிவியல் கல்லூரியில் சான்றிதழ் பதிவேற்றம் எப்போது??

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரிகளிலும் மட்டும் விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் நேரடி விண்ணப்ப முறைக்கு தமிழக அரசு தடைவிதித்தது இதனால் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆன்-லைனில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்ப பதிவு … Read more

தமிழக கல்வித்துறை – அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்து அதிரடி அறிவிப்பு!

தமிழக கல்வித்துறை - அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்து அதிரடி அறிவிப்பு!

தமிழக கல்வித்துறை – அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்து அதிரடி அறிவிப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்வுகள் அனைத்தும் கூட ரத்து செய்யப்பட்டு 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதம் கொரோனா விடுமுறை விடும்போது மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வழக்கம் போல … Read more

ஏடிஎம் மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பரபரப்பு?

ஏடிஎம் மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பரபரப்பு?

ஏடிஎம் மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பரபரப்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் தீ விபத்து குறித்து ஆரம்ப கட்டத்திலேயே தெரியவில்லை.இதனால் தீ ஏடிஎம் அறை முழுவதும் மளமளவென பரவியது.ஏடிஎம் மையத்தின் முழுவதும் தீ பரவிய பின்னரே அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த … Read more

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு சார்பில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் நடத்தினர் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கும் தொடர்ந்தது.இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.இதற்கு அடுத்து இதை எதிர்த்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து 8 வழிச்சாலை எதிர்ப்பு … Read more

கைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?

கைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதம் 2600 ஊழியத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. கொரோன பாதிப்பின் காரணமாக இந்த ஊதிய உயர்வு அமல்படுத்த முடியமால் போனது. முன்பு இருந்ததைவிட இந்த கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்கள்அதிக வேலைச் சுமை உடன் தனது உயிரையும் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றனர்.இருந்தபோதிலும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா பரவல் … Read more

சாத்தான்குளம் பிரச்சனையில் கைதான தலைமை காவலரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

Madras High Court Madurai Bench

சாத்தான்குளம் வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி தாண்வன் காணொளி காட்சி மூலம் விசாரித்தார். தொடக்க நிலை விசாரணை நடைப்பெற்று கொண்டிருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் முருகனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து … Read more

கல்லுரி தேர்வுகள் ரத்து: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு

Tamil nadu Government Cancels Semester Exam

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவதால் பள்ளி மற்றும் கல்லுரிகள் கால வரையறையின்றி மூடப்பட்டன. இதனையடுத்து இந்த ஆண்டிற்கான இறுதி தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இதனையடுத்து கல்வியாளர்கள் குழுவுடன் ஆலோசனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு … Read more

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி அறிவிப்பு!!

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி அறிவிப்பு!!

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பாதியிலும் விடுபட்டன.மேலும் இந்த தேர்வுகளை நடத்த இரண்டுக்கும் மேற்பட்ட தடவை தேதிகள் அறிவித்தும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது இதனால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு … Read more

கொரோனா மரணத்தில் அரசியல் செய்கிறார்கள் இந்த 420-க்கள்:?உதயநிதி ஸ்டாலின் கண்டனம்?

கொரோனா மரணத்தில் அரசியல் செய்கிறார்கள் இந்த 420-க்கள்:?உதயநிதி ஸ்டாலின் கண்டனம்?

தமிழகத்தில் பொருத்தமாட்டில் கடந்த 2 மாதங்களில் அதிகமாக கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டு வருகிறது.இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை 444 விடுபட்டுவிட்டதாகவும்,அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை, ஏற்பட்ட மரணங்களில் 444 இறப்புகள் விடுப்பட்டுள்ளன. இந்த 444 மரணங்களும் வேறு … Read more