சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்!

0
137
Superstar rajinikanth's next film update
Superstar rajinikanth's next film update

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார்.இயக்குனர் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்குகிறார்.மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கிறது.நவம்பர் 4ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழுஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதி வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த படத்தில் மீனா குஷ்பூ,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ்ராஜ்,ஜெகபதிபாபு,சூரி,சதீஷ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.தீபாவளி பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்புக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி நடிகர் ரஜினிக்கு ஒரு கதை சொல்லியுள்ளதாகவும் அந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

இதனையடுத்து பிரபல இயக்குனரான பாண்டிராஜ் தற்போது சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இவர் தற்போது காரைக்குடியில் படக்குழுவுடன் படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் நடிர் ரஜினிக்கு ஒரு கதை சொல்லியுள்ளதாகவும் அதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.இதனால் நடிகர் ரஜினியின் 169வது படத்தை இவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.இந்த தகவலானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

author avatar
Parthipan K