மனைவி நடத்தையில் சந்தேகத்தினால் செய்த செயல் ? புதுச்சேரியில் பரபரப்பு

0
86

மனைவி நடத்தையில் சந்தேகத்தினால் செய்த செயல் ? புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் பள்ளி ஆசிரியரை கழுத்தை அறுத்து கொலை செய்த ஆசிரியர் தாமாக சென்ற போலீசாரிடம் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் வேல்ராம்பேட் என்னும் பகுதியை சேர்ந்தவர் விஜயன். அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு ,தனியார் பள்ளியில் பணிபுரியும் சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் ,ஒரு மகளும் இருக்கின்றனர்.கொரோனா பொது ஊரடங்கால் இருவரும் வீட்டில் இருந்த நிலையில், தேவைப்பட்டால் அவ்வப்போது பள்ளிகளுக்குச் சென்று வருவது வழக்கமாக இருந்தது.

கடந்த சில மாதமாகவே விஜயதுக்கு, மனைவி சாந்தி அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு இருந்திருக்கின்றன.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தனது இரு குழந்தைகளும் இல்லாத பொழுது இருவருக்கும் இடையே நடந்து வந்த வாக்குவாதம் அதிகமானது. இதனால் ஆத்திரமடைந்த விஜயன், தனது மனைவியை கை ,கால்களை கட்டி போட்டு கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றனர். பின்பு தானாக சென்று போலீசிடம் சரணடைந்தார். மேலும் விஜயனை கொரோனா பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு ,சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டு மனைவியை கொன்றதால் இரு குழந்தைகளும் அனாதையாக உள்ளனர். மேலும் ,இந்த சம்பவம் புதுச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K