பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை? திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை என்றும், அவரை உடனே கண்டுபிடித்து தர கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பகுதியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்துமதி. கணவர் பெயர் பாண்டியன். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றதற்கான … Read more

ரத்தாகிறதா கூட்டுறவு சங்க தேர்தல்! இன்று சட்டசபையில் மசோதா தாக்கல்!

2018 ஆம் வருடம் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் மழையில் இருக்கின்ற சூழ்நிலையில் அதனை ரத்து செய்வதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் நகைக் கடன் வழங்கப்பட்டதில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மூலமாக பல விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்ட சபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக … Read more

சிறையில் இருந்தபடியே மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்!

சமீபத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதனால் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற சமயத்தில் வார்டு வரையறை சரியாக இல்லை என்று தெரிவித்து திமுக ஆட்செபம் தெரிவித்ததன் அடிப்படையில், அப்போது இந்த ஒன்பது … Read more

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

9 District Rural Local Elections: The second phase of voting begins today

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடந்த 6 ஆம் தேதி இந்த 9 மாவட்டங்களில் உள்ள 23,998  இடங்களுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த முதல்கட்ட வாக்கு பதிவின் போது 77.43 சதவீதம் ஓட்டு பதிவாகியது.  இந்நிலையில், இந்த 9 மாவட்டங்களில் இன்று 2 ஆம்  … Read more

செய்தியாளரை தாக்கிய திமுகவினர்..கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு.!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே மாலை 5 மணி முதல் 6 மணி வரை கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி வாக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தது. இந்த நிலையில் 5 மணிக்கு மேல் … Read more

விடுபட்ட 9 மாவட்டங்களில் முடிவடைந்தது முதல் கட்ட வாக்குப் பதிவு! ஒட்டுமொத்தமாக 74.37 சதவீத வாக்குகள் பதிவு!

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றது. ஆனால் அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த ஒன்பது மாவட்ட உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு … Read more

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற … Read more

நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை பார்த்து பயப்படும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு.!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதனையடுத்து விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் வெவ்வேறு காரணங்களை தெரிவித்து உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு கொண்டே வந்தது.இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது. ஆனால் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி … Read more

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? ஆளுங்கட்சியினரே அதிருப்தி!

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது, திமுகவின் வழக்கு காரணமாக வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தென்காசி,திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை முறையாக செய்யாமல் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மேலும் மூன்று மாத கால இடைவெளியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது, ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து அரசு நிர்வாகமும் முடங்கிப் போயுள்ளது,. இந்த சூழ்நிலையில் வார்டு வரையறையை ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளனர்,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது ஆனால், தற்பொழுது 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தலைமை மீதும் கட்சி மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர்,. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் இவர்கள் மட்டுமே பலனை பலனை அனுபவித்து வருவதால் தங்களுக்கு உரிய அங்கீகாரமும் தங்களுடைய வளர்ச்சிக்கு உள்ளாட்சி பதவிகளில் அமர்ந்தால் மட்டுமே கட்சியை பலமாக வைத்திருக்க முடியும் என்று புலம்பி வருகின்றனர்,

மேலும் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் மூலமாக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர், இதனால் செப்டம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக தயாராகி வருகிறது,