விராட் கோலிக்கு இன்னும் இத்தனை சதங்கல்தான் உள்ளன

விராட் கோலிக்கு இன்னும் இத்தனை சதங்கல்தான் உள்ளன

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோரை பாராட்டியுள்ளார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11,867 ரன்கள் அடித்துள்ளார். அதில் 43 சதங்கள் அடங்கும். சச்சின் சாதனையை தொட … Read more

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய வீரர்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய வீரர்

அமெரிக்கா ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் ரஷிய வீரர்களான 3-ம் நிலை வீரர் டேனில் மெட்வெதேவ் – 10-ம் நிலை வீரரான ஆன்ட்ரே ருப்லேவ் ஆகியோர் மோதினார்கள். முதல் செட்டில் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இதனால் முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் மெட்வெதேவ் 7(6) – 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 6-3 என மெட்வெதேவ் எளிதாக கைப்பற்றினார். 3-வது செட்டில் ஆன்ட்ரே ருப்லேவ் … Read more

ஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும்

ஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும்

அபுதாபி கசர் அல் வதன் அரண்மனையில் அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யானை இந்திய பிரதமரின் ஜி7 மற்றும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான அரசு சிறப்பு பிரதிநிதி சுரேஷ் பிரபு நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் உறவுகள் குறித்தும், இந்த உறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பொருளாதார ஒத்துழைப்பை அனைத்து துறைகளிலும் அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி … Read more

அபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?

அபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?

அபுதாபி சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக சென்று கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக 370 திர்ஹாம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் குறைக்கப்பட்டு 250 திர்ஹாம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஏற்படுத்தியுள்ள சிறப்பு பரிசோதனை மையங்களில் காரில் இருந்தே பரிசோதனை செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவலை அபுதாபி சுகாதாரத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து … Read more

பத்திரிகையாளர்களுக்கு தண்டனை விதித்த துருக்கி நாடு

பத்திரிகையாளர்களுக்கு தண்டனை விதித்த துருக்கி நாடு

துருக்கியில் பேரிஸ் டெர்கோக்லு, ஹூல்யா கிலிங்க், எரன் எகின்சி, பேரிஸ் பெஹ்லிவன், பெர்ஹட் செலிக், அய்தின் கெசர், எரிக் அகாரர், முரார் அகிரல் ஆகிய 8 பத்திரிகையாளர்கள் மீது  அரசின் ரகசியத்தை வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் பேரிஸ் டெர்கோக்லு, எரன் எகின்சி ஆகியோர் குற்றமற்றவர்கள் என கூறி கோர்ட்டு விடுதலை செய்து விட்டது. அதே நேரத்தில், பேரிஸ் பெஹ்லிவன் மற்றும் ஹூல்யா கிலிங்க் ஆகிய இருவருக்கும் தலா 45 மாதங்கள் சிறைத்தண்டனையும், முரார் … Read more

இது கொரோனா பரிசோதனையா அல்லது பள்ளி தேர்வு முடிவா

இது கொரோனா பரிசோதனையா அல்லது பள்ளி தேர்வு முடிவா

இந்த வருடம் ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட  பின்னரே பயிற்சியில் அனுமதிக்கப்படுவர். இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் அய்யர் கொரோனா பரிசோதனை அரசுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று கூறினார். அறைக்குள் இருப்பது எளிதான காரியம் அல்ல. வெப்பம் … Read more

என்னால் தொடக்க வீரராக கூட களமிறங்க முடியும்

என்னால் தொடக்க வீரராக கூட களமிறங்க முடியும்

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் தலைமுறையில் ஷுப்மான் கில் சிறந்த வீரராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.இதனால் கேகேஆர் அணி ஷுப்மான் கில்லை ஏலம் ஏலம் எடுத்தது. இந்நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் வாய்ப்பு கிடைத்தால், களம் இறங்க தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தொடக்க வீரராக களம் இறங்குவேன். நான் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது அந்த சூழ்நிலையில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்ற … Read more

ஒன்பது லட்சத்தை தாண்டிய கொரோனா பலி

ஒன்பது லட்சத்தை தாண்டிய கொரோனா பலி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. மேலும் இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞானிகள் அனைவரும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,172 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 … Read more

இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனரா

இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனரா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 3 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 83 லட்சத்து 14 ஆயிரத்து 732 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 70 லட்சத்து 75 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 845 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 13 ஆயிரத்து … Read more

கொரோனாவை தடுக்க சீனாவில் இப்படி ஒரு வைத்தியமா?

கொரோனாவை தடுக்க சீனாவில் இப்படி ஒரு வைத்தியமா?

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு இது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன … Read more