புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பணியிட மாற்றம்!!

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த கள்ளச்சாராயம் புதுச்சேரி பகுதியில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் கலால்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் குற்றச்சாட்டு ஏதிரொலியாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகரை பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக … Read more

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது??

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது?? தமிழகத்தில், சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சேலம், சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்தக் கோடை காலத்தில் என்ன தான் ஏ.சி, மின்விசிறி இருந்தாலும் அனல் காற்று தான் வீசுகிறது. இந்தக் கோடை காலத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது … Read more

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை!!

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை! தமிழ்நாட்டில் இனிமேல் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்று மதிமுக வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மட்டுமில்லாமல் வேலூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இந்த சம்பவம் … Read more

தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டை- குற்றவாளிகள் கைது!

தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1555 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. சுள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 218 லிட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும் ஏழு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டது. … Read more

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!! தமிழகத்தில் கள்ளச்சாரயத்தினால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 13 பேர் உயிரிழிந்துள்ள நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாரயம் கலாச்சாரத்தை ஒழிக்க பல அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து கட்சி தலைவர்கள் … Read more

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்!!

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 108.14 டிகிரி பாரன்டிட் வெயில் பதிவு! சென்னையில் அதிகபட்சமாக இரண்டாவது நாளாக 105.44 டிகிரி பாரன்டிட் வெயில் பதிவு! தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை … Read more

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் … Read more

அடுத்த தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!!

அடுத்த தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து! தமிழகத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் பாஜக கட்சி சரித்திரம் படைக்கும் என்று அந்த கட்சியின்  மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் பாஜக அரசு 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக … Read more

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என கூறுவது ஸ்டாலின் கற்பனையே -எல்.முருகன்!

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது திருப்திக்காக கூறி வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வைத்திகுப்பம் பகுதியில் மீனவர்களின் குறை கேட்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மீனவர்களுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், கர்நாடகாவில் ஏற்பட்ட … Read more

கள்ளச் சாராயத்திற்கு மூன்று பேர் பலி! கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது!!

கள்ளச் சாராயத்திற்கு மூன்று பேர் பலி! கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது! தமிழ் நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கள்ளச் சாராயம் காய்ச்சிய நபரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை  சேர்ந்தவர் அமரன். இவர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றுள்ளார். இதில் … Read more