மீண்டும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!!

0
49
Tamil Nadu fishermen arrested again by Sri Lanka Navy!!
Tamil Nadu fishermen arrested again by Sri Lanka Navy!!

மீண்டும் இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள்!!

தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக இலங்கை கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கபடுகின்றனர்.

இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை பறித்து கொண்டு அவர்களை அச்சுர்த்துவது மற்றும் நாடுகளில் வைத்து தாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளது

மேலும் அவர்களை சிறை பிடிப்பது ,துப்பாக்கி சூடு நடத்துவது போன்ற பல கொடுமைகளை இலங்கை கடற்படையினர் அரங்கேற்றி கொண்டே வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது எல்லை தாண்டி மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் எடுத்து சென்ற விசை படகுகள் வலைகள் உள்ள பொருட்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்க என்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படை அதிக்காரிகள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியானது.அழைத்து சென்ற 9 மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டி மீன்பிடிக்க என்ற 800 மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் சுட்டு படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K