தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்

0
124

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக உள்ளது அதனால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக, கடந்து ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கரையை நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் கூறியுள்ளது.

அதன் காரணமாக, சென்னை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40கி.மீ முதல் 60கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.