தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!! நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா!!

0
109
#image_title

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து நிலை நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மிதமான மழையினால் தரைக்கடை வியாபாரிகள் பாதிப்பு.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இந்நிலையில் தேர் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து தேர் மண்டபத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

சிறிது நேரத்தில் மிதமான மழை பெய்ததால் தேரை பார்க்க வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து தரைக்கடை வியாபாரிகள் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்ய வந்த நிலையில் மழையின் காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூரில் காலையிலிருந்து வெயில் சுட்டெரித்த நிலையில் மிதமான மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

author avatar
Savitha