தொண்டரை பளார் என்று கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்! கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்!

0
75
The Congress leader who slapped the volunteer on the cheek! Condemning public!
The Congress leader who slapped the volunteer on the cheek! Condemning public!

தொண்டரை பளார் என்று கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்! கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்!

தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவு பாதித்து வருகின்றனர்.மக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் இதர தலைவர்கள் தங்களின் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை தகற்ற பல்வேறு கூட்டங்களை கூட்டி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு பல கூட்டங்கள் நடைபெறும் போது தொண்டர்கள் சற்று ஆவேசம் அடைந்து புகைப்படம் எடுப்பதர்காகவும் அல்லது இதர காரணங்களுக்காவும் தலைவர்களின் அருகில் செல்ல நினைக்கின்றனர்.அவ்வாறு செல்லும் போது சில தலைவர்கள் அவர்களை தவறாக எண்ணி அனைவரின் முன்பும் ஆபாச வார்த்தைகளால் பேசியும் அல்லது தாக்கியும் விடுகின்றனர்.அது பெரும் பரபரப்பை எற்படித்திவிடுகிறது.

அதுபோல் தான் தற்போது கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனைகளை மேல் பார்வையிட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மாண்டியா என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.அவர் பார்வையிட்டு திரும்பி வரும் போது அவரது தொண்டர் ஒருவர் அவர் மீது கை போட முன் வந்துள்ளார்.அதை பிடிக்காத டி.கே.சிவக்குமார் அந்த தொண்டரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.அவ்வாறு அவர் அறைந்ததும் ஏன் அறைந்தீர்கள் என சுற்றி இருந்தவர்கள் கேள்விக்கேட்காமல் வியப்புடம் பார்த்தனர்.அவர் அறைந்த அந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி அந்த தொண்டரை ஆதரித்து டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.இந்த அரசியல்வாதிகள் ஓட்டுக்களை கேட்கும் போது மட்டும் மக்களுடன் மக்களாக இருப்பது போல,மக்களுடன் டீ அருந்துவது,ஏதேனும் ஓர் நபரின் தோள் மேல் கைப்போட்டு புகைப்படம் எடுப்பது என்று விளம்பரம் செய்து காட்டுகின்றனர்.இந்த வாக்கு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாளே ஓட்டு போட்ட மக்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விடுகின்றனர் என இவ்வாறெல்லாம் விமர்சித்தும் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.