ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

0
80
Teachers are becoming a role model for children! Teacher who sexually harassed for 10 years!
Teachers are becoming a role model for children! Teacher who sexually harassed for 10 years!

ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு பல அவதூறுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிப்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி பெண்கள் படிப்பது குறைந்து விடும் எனத் தோன்றும் அளவிற்கு பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பி தான் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.ஆனால் ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறிவிடும் சூழல் தற்போது நிழவுகிறது.

சமீபகாலமாக பத்மா சேஷாத்ரி பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் செய்த லீலைகளை தற்போது மாணவர்கள் கூறியதால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. அத்தோடு பெண்கள் அதிகப்படியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவது பற்றியும் பல திடுக்கிடும்உண்மைகள்  வெளிவந்தது. சென்னை மயிலாப்பூர் தென்னாத்தூர் சுப்பிரமணிய ஐயர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தனக்கு கற்பித்த ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் கூறியதாவது, நான் 2004 முதல் 2014 வரை பத்து வருடங்கள் பி.எஸ் பள்ளியில் படித்து வந்தேன். அப்போது எனக்கு பாடம் கற்பிக்க வந்த ஆசிரியர்களான சிவகுமார் ,வெங்கட்ராமன் ,ஞானசேகரன் ஆகியோர் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாணவி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் .

தற்போது துணை ஆணையரின் பரிந்துரையின்பேரில் மகளிர் அனைத்து மகளிர் போலீசார் அந்த பள்ளியில்  விசாரணை செய்து வருகின்றனர். மேலும் போலீசார் இந்த விசாரணையில் புகார் அளித்துள்ள இந்த மூன்று ஆசிரியர்களும் எத்தனை வருட காலங்கள் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆசிரியர்கள் மீது மாணவிகள் முன்பே ஏதேனும் புகார் அளித்துள்ளார்களா என்றெல்லாம் பள்ளி நிர்வாகத்திடம்  போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.