மாஸ்டர் பிளான் போட்ட முதல் மனைவி! தீர்த்துக்கட்டிய கணவர்!

0
136

மாஸ்டர் பிளான் போட்ட முதல் மனைவி! தீர்த்துக்கட்டிய கணவர்!

தனது முதல் மனைவியின் துணையோடு இரண்டாவது மனைவியை கணவர் தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாய்பாபா நகரில் பசதொந்தோ கிராமத்தில் வசித்து வருபவர் சோக்ரா பன்ரா. இவர் முதலில் சுனிதா பன்ரா என்ற பெண்ணை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சோக்ரா சோம்வாரி பன்ரா வயது28 என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது மனைவியுடன் அவருக்கு சுமூகமான உறவு நீடிக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முதல் மனைவி சுனிதா இதுவே தக்க சமயம் என கணவருக்கு இரண்டாவது மனைவியை கொல்ல திட்டம் தீட்டி கொடுத்தார்.

இதை அடுத்து ரூ 5000 ரூபாய்க்கு முதல் மனைவி துணையுடன் சோக்ரா கூலிப்படையை அமர்த்தி இரண்டாவது மனைவி சோம்வாரியை கொலை செய்துள்ளனர்.

கிணறு ஒன்றில் கிடந்த சோம்வாரின் உடலை பார்த்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் இருந்து உடலை மீட்ட போலீசார் கூலிப்படையைச் சார்ந்த ரவி ரோஷன் பூர்த்தி- வயது 19 மற்றும் கமலேஷ் பூட்டியா – வயது 21 ஆகிய இருவரையும் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். பின்னர் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் சோக்ரா மற்றும் அவரின் முதல் மனைவி சுனிதாவையும் சேர்த்து கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும்   சோம்வாரியை  கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கொலை நடந்த சம்பவத்தன்றும் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளதோடு மட்டுமில்லாமல் முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் இந்த உண்மையை  அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இருவரிடமும் மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.