10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியீடு!

0
153
#image_title

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியீடு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்காக, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் 14.12.2022 முதல் 28.12.2022 வரை தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணத்திணையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் எனத் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தற்போது மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் நாளை  (17.02.2023) பிற்பகல் முதல் www.dge1.tn.gov.inஎன்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Passwordஐ மூலம் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.

author avatar
Parthipan K