வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை!

0
77
The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!
The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை!

ஆந்திர மாநில ராய்சோட்டி பகுதியை சேர்ந்தவர்  14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்காக பெற்றோர் அச்சிறுமியை டியூஷனில் சேர்த்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் அபிராமி ரெட்டி. இவருக்கு இன்னும் திருமண ஆகவில்லை. அபிராமி ரெட்டி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார்.

அபிராமி ரெட்டி நடத்திய டியூஷனில் 7 மாதங்களுக்கு முன்பு அச்சிறுமி சேர்ந்தாள். பள்ளி முடிந்து தினந்தோறும் அச்சிறுமி அபிராமி ரெட்டியின் டியூஷனில் படித்து வந்துள்ளார். அப்போது மாணவியிடம் அபிராமி ரெட்டி உன்னை பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைய வைக்கிறேன் .இது என்னுடைய பொறுப்பு என்று ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் நெருங்கி பழக தொடக்கினார்.

டியூஷன் படிக்கும் மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அந்த சிறுமியிடன் சிறப்பு வகுப்பு நடத்துகிறேன் என்று கூறி தவறாக நடக்க முயன்றார். பத்தாம் வகுப்பு தேர்வில் பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக அந்த சிறுமி யாரிடம் கூறாமல் இருந்துள்ளார். இதையடுத்து அச்சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார்.தொடர்ந்து ஏழு மாதங்களாக ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது, இதில் இந்த சிறுமி இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இது குறித்து சிறுமிடம் அவரது பெற்றோர் கேட்க போது, டியூஷன் நடத்தும் ஆசிரியர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வைப்பதாக கூறியிருந்தார். என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார்.

அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராய்ச்சோட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர் ரெட்டி வழக்கு பதிவு செய்து அபிராமி ரெட்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author avatar
CineDesk