பள்ளி சென்று பெண் ஆசிரியை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் !. ஆடைகளைக் கிழித்து கேவலப்படுத்திய உறவினர்கள்?..

0
86
The parents of the student who went to school and attacked the female teacher! Relatives who tore their clothes and insulted them?
The parents of the student who went to school and attacked the female teacher! Relatives who tore their clothes and insulted them?

பள்ளி சென்று பெண் ஆசிரியை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் !. ஆடைகளைக் கிழித்து கேவலப்படுத்திய உறவினர்கள்?..

மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில்  ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார்.

அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பிறகு மறுநாள் வகுப்புக்கு தொடர வந்த மாணவியை அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்ததாக தெரிகிறது. அப்பள்ளி மாணவிக்கு கண்ணம் சிவந்த நிலையில் இருந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைப் பற்றி கேட்ட மாணவியின் பெற்றோர் கொந்தளித்து பள்ளியை நோக்கி வந்தனர். திடீரென்று மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியினுள்  நுழைந்து அந்த ஆசிரியர் இருக்கும் வகுப்புக்குள் சென்றனர்.

ஆசிரியர் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த நிலையில் உள்ளே சென்ற மாணவியின் பெற்றோர்கள் அவரை பலமாக தாக்கியுள்ளனர். தாக்கியது மட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த ஆடைகளையும் சரமாரியாக கிழித்துள்ளனர். அவரின் உடல் முழுவதும் கீறல் காயங்கள் ஏற்பட்டன.

இது பற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் மாணவியின் உறவினராக இருந்த நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பள்ளி முழுவதும் பரப்பரப்பு சூழல் ஏற்பட்டு வந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

author avatar
Parthipan K