ஐந்து வருடம் கழித்து எங்கிருந்து வந்தார் முதல் மனைவி?? கேள்விக்குறியானது நடிகை பிரியாமணியின் வாழ்க்கை!!

0
75
The wedge that came to Priyamani !! Pakir information given by husband's first wife !!
The wedge that came to Priyamani !! Pakir information given by husband's first wife !!

ஐந்து வருடம் கழித்து எங்கிருந்து வந்தார் முதல் மனைவி?? கேள்விக்குறியானது நடிகை பிரியாமணியின் வாழ்க்கை!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரியாமணி. இவர் தேசியம் விருது பெற்ற இந்திய திரைப்பட நடிகை. மேலும் இவர் ஆரம்ப காலத்தில் மாடலிங் பணியில் இருந்து சினிமா துறைக்கு நுழைந்தார். இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் 2004 முதல் 2012 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கினார். மேலும் இவர் தற்போது தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை பிரியாமணிக்கு தமிழில் கொஞ்சம் மார்க்கெட் குறையவே பட வாய்ப்புகளுக்காக தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவருக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவ்வப்போது பிரியாமணியும் அவரது கணவர் முஸ்தபா ராஜ் இருவரும் இணைந்து பல புகைப்படங்கள் எடுத்து அதை வலைதளத்தில் அவ்வபோது வெளியிட்டு வருவார்கள்.

இந்த நிலையில் முஸ்தபாவின் முதல் மனைவியான ஆயிஷா தற்போது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். முஸ்தபாவுக்கும் அவரின் முதல் மனைவிக்கும் முறையான விவாகரத்து நடைபெறவில்லை என்றும், அதற்காக நீதிமன்றத்தை கூட அவர்கள் நாடவில்லை என்றும் கூறியுளளார்.மேலும் முறையாக விவாகரத்து வழங்காத போதே முஸ்தபா பிரியாமணியை திருமணம் செய்து கொண்டார் என்று கூறுகிறார். ஆனால் முஸ்தபா தரப்பில் அவர் கூறுவது அத்தனையும் பொய், விவாகரத்துப் பெற பெற்றுவிட்டோம் என்று கூறிவருகிறார் இதை முஸ்தபாவின் முதல் மனைவி ஆயிஷா கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

author avatar
CineDesk