சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடு ரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!! 

0
60
The wife refused to live together!! Cruel act done by the husband in the middle of the road!!
The wife refused to live together!! Cruel act done by the husband in the middle of the road!!

சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடுரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!! 

வேலைக்கு சென்று கொண்டிருந்த மனைவியை கணவர் ஒருவர் நடுரோட்டில் வழிமறித்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 41.  இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சூரியா 30. இவர்களுக்கு 5 வயதில் பிரகதி என்ற மகள் உள்ளார்.  பிரபாகரனின் வீடு, தேவகோட்டை சரசுவதி வாசக சாலை காசிலிங்கம் நகர்  என்ற பகுதியில் உள்ளது. சூர்யா தேவகோட்டையில்  இருக்கும் அழகு நிலைய நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் பிரபாகர் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்காக தனது சொந்த ஊரான கடம்பாகுடிக்கு வந்தார். தனது மனைவியையும் அங்கேயே வருமாறு அழைத்தார். ஆனால் சூர்யா வர மறுத்து விடவே இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் பிரபாகர் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு புகார் தெரிவித்தார். உறவினர்கள் மற்றும் காவல் நிலையத்தில் எவ்வளவு சமரசம் செய்தும் சூர்யா தனது கணவருடன் செல்ல மறுத்து விட்டார்.

இதற்கு காரணமாக கணவர் தனக்கு அதிகமாக செக்ஸ் டார்ச்சர் தருவதாக காவல் நிலையத்தில் கூறியுள்ளார். இதனால் மனைவி மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்த பிரபாகர் அவரது நடத்தை மீதும் சந்தேகம் கொண்டார்.

இந்த சூழ்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக சரஸ்வதி வாசகசாலை யில் தனது மொபட்டில் சூர்யா சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னதாக அங்கு வந்து காத்திருந்த பிரபாகர் சூர்யா மீது தனது மோட்டார் சைக்கிளால் மோதினார். இதனால் தடுமாறிய சூர்யா கீழே விழுந்து கூச்சலிட்டார்.

அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு வருவதற்குள் பிரபாகர் தான் வைத்திருந்த அரிவாளால் சூர்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். நடு ரோட்டில் நடந்த இந்த கொலையை பார்த்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நேராக தேவகோட்டை காவல் நிலையம் சென்ற பிரபாகர் மனைவியை கொன்று விட்டதாக கூறி போலீசில் சரணடைந்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சூர்யாவின் உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து பிரபாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.