கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்!

0
101
The woman threatened by showing the video that was a club! Important political figures caught in the net!
The woman threatened by showing the video that was a club! Important political figures caught in the net!

கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்!

ஒடிசா மாநிலத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா.இவர் மீது அதே ஊரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.அந்த புகாரில் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தது.மேலும் இணையத்தில் அச்சாய பரிஜா அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.அந்த புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் அக்சயா பரிஜா ,அர்ச்சனா மற்றும் ஷ்ரதஞ்சலி ஆகிய இரண்டு பெண்கள் மூன்று கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாக போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.மேலும் அர்ச்சனா மீது மற்றொரு பெண்ணும் போலீஸில் புகார் அளித்தனர்.அந்த புகாரில் தனது அந்தரங்க படங்களைக் காட்டி மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ச்சானா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அரசியல் தலைவர்கள் ,தொழிலதிபர்கள் ,சினிமா தயாரிப்பாளர்கள் அவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.மேலும் இவர் அவர்களுடன் உல்லாசமாக இருந்தபோது அதை ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.அதனையடுத்து அந்த வீடியோக்களை காட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளார்.மேலும் இந்த குற்றங்கள் அனைத்திற்கும் அவருடைய கணவர் ஜகபந்து சந்து உடந்தையாக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

author avatar
Parthipan K