கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி!

0
122

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி!

ஆங்கில மற்றும் சித்த மருந்துகளை இணைத்து கொரோனாவிற்க்கு கொடுக்கும்பொழுது கட்டுக்குள் வருகிறது என்று சித்த மருத்துவர் சதீஷ் பேட்டி அளித்துள்ளார்.கொரோனா தடுக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுக்கவேண்டும் என்று சித்த மருத்துவர் சாய் சதீஷ் அளித்துள்ள பேட்டி:

கொரோனாவை தடுக்க சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர்க்கு பதில் என்ன உள்ளன? என்பதற்கான கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

கொரோனா வின் இரண்டாவது அலை உலகமெங்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாவது அலை உருமாற்றம் அடைந்து தீவிரமாக பரவி வருவதால் அதற்கு ஏற்றவாறு மருந்துகளிலும் மாற்றம் செய்து கொடுத்தால் கொரோனா கட்டுக்குள் வரும்.கபசுரக் குடிநீரையும் நிலவேம்பு குடிநீரையும் சேர்த்து கொடுக்கும் பொழுது கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டு பொடிகளையும் தலா ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து சுடுநீரில் காய்ச்சி வடிகட்டி குடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த வழி என்ன?

ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த கூடிய ஒரே ஒரு பொருள் லவங்கம் தான். அதில் அதிக படியான ஓரக் வேல்யூ இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஏற்படும் தொற்றுக்கு மூச்சு பயிற்சி செய்வது மிகவும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்பின் சித்த மருத்துவர்களை அணுகி அவர்கள் தரும் மருந்துகளை உண்ணும் பொழுது உங்களுக்கு விரைவான தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு சித்த மருந்துகளை கொடுக்கலாம் என்பதற்கான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். காய்ச்சல் உச்ச நிலையில் இருக்கும் பொழுது பாராசிட்டமால் கொடுத்து அதோடு சில சித்த மருந்துகளைக் கொடுக்கும் பொழுது பயனளிக்கும் என்று கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் சித்த மருந்துகளை எடுக்கலாமா என்பதற்கான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி போட்ட பிறகு ஒரு நாள் கழித்தே சித்த மருந்துகளை எடுக்க வேண்டும். எந்த ஒரு பக்க விளைவுகளும் இருக்காது என்று பதிலளித்துள்ளார்.

சாதாரண மக்களுக்கு கொரோனாவில் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பதில் அளித்துள்ளார்.

சாதாரண மக்கள் நிலவேம்பு குடிநீரையும் கபசுரக் குடிநீரையும் இரண்டையும் பத்து நாட்கள் தொடர்ந்து குடித்து வரும்பொழுது வராமல் காத்துக்கொள்ளலாம். மேலும் இன்னும் மூன்று மாதங்களில் கொரோனா தாக்கம் குறையும். இது ஒரு அம்மை நோய் போன்றது தான். சித்த மருந்துகளை எடுத்து எவ்வளவோ பேர் குணமடைந்துள்ளனர். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்படுங்கள் என்று அவர் பதிலளித்துள்ளார்.