வளர்த்த இயக்குநருக்கே துரோகம் செய்த வடிவேலு.. – வெளியான தகவல்.. – திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!

0
42
#image_title

வளர்த்த இயக்குநருக்கே துரோகம் செய்த வடிவேலு.. – வெளியான தகவல்.. – திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவரை ரசிகர்கள் ‘வைகை புயல்’ என்று அன்போடு அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் வடிவேலு சின்ன, சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ‘என் ராசாவின் மனசிலே’, ‘தேவர் மகன்’ உட்பட படங்களில் தன்னுடைய காமெடியால் மெல்ல மெல்ல ரசிகர்களிடம் பிரபலமானார்.

இதனையடுத்து, ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து காமெடியில் பட்டையை கிளப்பினார்.  இவருடைய காமெடியைப் பார்த்து ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்தனர்.

இதன் பிறகு ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தில் கதாநாயகனாக அவதரித்தார். இப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தையும் புகழையும் பெற்றுத் தந்தது. ஆனால் இதன் பிறகு இவர் கதாநாயகனாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி போன்ற படங்கள் தோல்வி அடைந்தன.

ஆனால், புகழியின் உச்சிக்கு செல்ல செல்ல, வடிவேலுவிற்கு தலைக்கணம் அதிகரிக்கத் தொடங்கியது. தன் உடன் நடிக்கும் சக காமெடியர்களுக்கு இவர் எந்தவித உதவியும் செய்யவில்லையாம். ‘காதலன்’ படத்தில் இயக்குநர் ஷங்கர்தான் வடிவேலுக்கு ஒரு முக்கிய காமெடி ரோல் கொடுத்து நடிக்க வைத்தார். அதுமட்டுமல்லாமல் ‘முதல்வன்’ படத்திலும் நடிக்க வைத்தார்.

இதன் பிறகு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்கு இயக்குனர் ஷங்கர்தான் தயாரிப்பாளராக இருந்தார். ஆனால், இப்படத்தில் வடிவேலு நடிக்கும்போது, இயக்குனர் பேச்சை கேட்காமல் வாக்குவாதம் செய்தாராம். இதனால், ஷங்கருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாம். மேலும், இயக்குனர் ஷங்கரிடமே இவர் பணமோசடிகள் செய்து அவரை மிகவும் கஷ்டப்படுத்தினாராம்.

ஆண்டு காலக்காலமாக நடிக்காமல் இருந்த வடிவேலு, சமீபத்தில் வெளியான சந்திரமுகி2 படத்தில் இவரின் காமெடிகள் ரசிகர் மத்தியில் ரசிக்கும்படியாக இல்லையாம். இது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் வடிவேலுவை தாக்கி கமெண்ட் செய்து வருகின்றனர். வளர்த்துவிட்ட இயக்குனர் ஷங்கருக்கே இவர் துரோகம் செய்தார். அந்த சாபம்தான் இவருக்கு இடியை கொடுத்திருக்கிறது என்று பேசப்படுகிறது.

author avatar
Gayathri