மேகம் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சி! விழுப்புரம் அருகே நடந்த நிகழ்வு!

0
92
View to know the cloud absorbs sea water! A rare event happened near Villupuram!
View to know the cloud absorbs sea water! A rare event happened near Villupuram!

மேகம் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சி! விழுப்புரம் அருகே நடந்த  நிகழ்வு!

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சியை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம், மற்றும் காணொளி எடுத்துள்ளனர் தமிழக மீனவர்கள். விழுப்புரம் அருகே நடந்த இந்த அதிசய நிகழ்வு தற்போது சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆலம்பாறை என்ற இடத்தில கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கீழே இறங்கியும், கடல் நீரானது சுழல்போல மேல்எழுந்து மேகத்தினுள் இழுக்கப்படும் காட்சியையும் அவர்கள் கண்டு அதிசயித்தனர்.

சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த அதிசய நிகழ்வை மீனவர்கள் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.மீனவர்கள் மொழியில் இதனை யானை தும்பிக்கையை இறக்கி இருக்கிறது. என சொல்வார்கள். ஆனால் அறிவியல் அறிஞர்கள் இதனை டோர்னடோ என பெயரிட்டு உள்ளனர். தமிழில் இதனை நீர்த்தாரைகள் என்பர்.

இதைப்பற்றி கடலூர் துறைமுக அதிகாரி கூறுகையில் கடலின் மேலே வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பக் காற்றாகவும் இருந்தால் இந்த நீர்த்தாரைகள் எனப்படும் .அதிசய நிகழ்வுகள் ஏற்படும் என கூறினார்.

பொதுவாக பருவநிலை மாற்றத்தின் போது இது போன்ற மாற்றங்கள் ஏற்படும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்ப நிலையும் சம நிலைக்கு மாறும் போது நீர்த்தாரைகள் மறைந்து விடும்.இந்த நிகழ்வின் பொது கடல் நீர் மிக வேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறும். இந்த வேகம் பல கிலோமீட்டராக இருக்கும்.

இதற்கு ஆங்கிலத்தில் டோர்ணடோ என பெயர். ஐரோப்பிய பகுதிகளில் அதிகமாக காணப்படும் இவை பருவ காலம் மாறும் போது நடைபெறும் நிகழ்வுகள் என கூறினார்.