வடிவேலுவை புக் செய்ய சொன்ன கேப்டன்! வடிவேலு கொடுத்த பதிலுக்கு ஆடிப்போனார்!

0
198
#image_title

சொக்கத்தங்கம் என்ற படம் 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது. இந்த படத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, கவுண்டமணி செந்தில், உமா ஆகியோர் நடித்திருப்பார்கள்.

 

படம் தங்கையின் பாசம் காரணமாக உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தின் போது விஜயின் வசீகரா, விக்ரமின் தூள் ஆகிய படங்கள் வெளியான நிலையிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

 

கன்னி பருவத்திலே என்ற படம் பாக்யராஜ் இயக்கிய அந்த படம், முதலில் சாய்ஸாக விஜயகாந்த் தான் இருந்து உள்ளார். அதன் பிறகு என்ன காரணமோ தெரியவில்லை. படம் ராஜேஷ் அவர்கள் நடிக்க வேண்டியதாக இருந்தது.

 

பிறகு 24 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை பாக்கியராஜ் இயக்கி மாபெரும் வெற்றி கதையாக அமைந்தது.

 

முதன் முதலில் பாக்கியராஜ் சொல்லும்பொழுது, காமெடிக்கு வடிவேலுவை போடலாம் என்று, விஜயகாந்த் சொல்லி இருக்கிறார்.

 

சரி என்று சொல்ல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் சேர்ந்து வடிவேலுவை சென்று பார்த்திருக்கிறார்கள். அப்பொழுது வடிவேலும் மிகவும் பீக்கில் இருந்திருக்கிறார்.

 

அப்பொழுது வடிவேலு சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறார்கள். ஏனென்றால் விஜயகாந்த் வாங்கும் சம்பளத்தை விட அதிகமான சம்பளத்தை வடிவேலு கேட்டிருக்கிறார்.

 

இதிலிருந்து ஒரு பைசா கூட கம்மி பண்ண முடியாது. இல்லையென்றால் கிளம்புங்கள் என்று வடிவேலு சொல்லி இருக்கிறார்.

 

படப்பிடிப்பு இதனால் தள்ளிக்கொண்டே போயிருக்கிறது. என்ன காரணம்? என்று விஜயகாந்த் ஒரு சமயம் கேட்ட பொழுது இதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

 

ஒரு சமயம் எதேர்சையாக வடிவேலுவும் விஜயகாந்த் அவர்களும், ஏர்போர்ட்டில் சந்தித்து கொள்கிறார்கள். அப்பொழுது வடிவேலுவை பார்த்து விஜயகாந்த் ” ஏனப்பா சம்பளத்தை கூட்டி கேட்கின்றாய். நடித்து தரக் கூடாதா என்று வடிவேலுவை பார்த்து கேட்க.

 

வடிவேலு தான் என்ற கர்வத்துடன் அவர் சொன்ன பதில் விஜயகாந்தை ஒரு நிமிடம் மனம் நொறுங்க செய்திருக்கிறது

 

வடிவேலு ” நான் அப்படி ஒரு படத்தில் உன்னை சிபரிசுக்கு சொல்லி, அவர்கள் உனக்கு சம்பளம் கம்மியாக தந்தால் நீ ஒத்துக் கொள்வாயா என்று ஒரு கர்வ தோனியில் கேட்டுள்ளார்.

 

அப்பொழுதே விஜயகாந்துக்கு புரிந்து விட்டது. இவனுக்கு போட்டி நம்மிடமே. படத்தில் எந்தவிதமான போட்டியும் இல்லை என்று.

 

பிறகு கவுண்டமணி செந்தில் அவர்களை இதில் நடிக்க வைத்து படம் மாபெரும் ஹிட் ஆனது.

author avatar
Kowsalya