நடிகர் தனுஷ்க்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் குழப்பம்! ஓ.. இதான் விஷயமா!!

0
31
#image_title

நடிகர் தனுஷ்க்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் குழப்பம்! ஓ.. இதான் விஷயமா!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.இவர் தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்,ஹாலிவுட் உள்ளிட்ட என தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக நகர்த்தி கொண்டு செல்கிறார்.இதுவரை 50 படங்களில் நடித்துள்ள தனுஷ் தேசிய விருது உட்பட பல விருதுகளை தட்டி தூக்கி இருக்கிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்ப கால திரை வாழ்க்கையில் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார்.தனக்கு ஏற்பட்ட அவமானங்களை கொண்டு சாதனையாளராக தன்னை நிலை நாட்டிய இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட 18 வருடங்கள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.இவர்களுக்கு லிங்கா,யாத்ரா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.இவர்களின் விவாகரத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார்.

சமீபத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்த தனுஷ் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவரது 50 வது படத்தை அவரே இயக்கி நடிக்க இருக்கிறார்.இத்திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீப காலமாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தால் நடிப்பில் மட்டும் முழு கவனத்தை செலுத்தும் தனுஷ் சமீப காலமாக படப்பிடிப்பு தளத்தில் சோகமாக இருக்கிறார்.விவாகரத்து பெற்ற ஆரம்ப நாட்களில் வாழ்க்கையில் சந்தோசமாக இருந்த தனுஷ் தற்பொழுது அடிக்கடி சூட்டிங் கேன்சல் செய்து வருகிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.இதற்கு காரணம் தனுஷ்,ஐஸ்வர்யா விவாகரத்து தான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.