மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!!

0
172
Try to misbehave with your wife!! The husband who strangled his friend to death!!
Try to misbehave with your wife!! The husband who strangled his friend to death!!
மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலசெங்கமேட்டை சேர்ந்தவர் 28 வயதான சசிகுமார். சசிகுமார் கார் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேட்டை சேர்ந்தவர் 31 வயதான மணிமாறன்.
சசிகுமார் மற்றும்  மணிமாறன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். கம்பி கட்டும் வேலையை பார்க்க வேண்டி மணிமாறன் அவர்கள் சீர்காழியில் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகிறார். நண்பன் மணிமாறன் அவர்களை சந்திப்பதற்காக சசிகுமார் அவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
கடந்த 16ம் தேதி சசிகுமார் அவர்கள் சீர்காழியில் உள்ள மணிமாறன் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மணிமாறன் மனைவியிடம் சசிகுமார் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததால் ஆத்திரம் அடைந்த மணிமாறன் நண்பன் சசிகுமாரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மணிமாறனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு மணிமாறனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.