2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் – ஒருங்கிணைப்பு தலைவர் தகவல்

0
219

2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் – ஒருங்கிணைப்பு தலைவர் தகவல்

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் ஆகஸ்ட் 9ம் தேதி துவங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான யோஷிரோ மோரி, கொரொனா பரவல் கட்டுக்குள் வந்து நிலைமை சீரடைந்தால் மட்டுமே அடுத்த ஆண்டு ஒலிம்பிக் நடக்கும் என்றும், நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே கொரொனாவிற்க்கு மருந்து கண்டறியப்பட்டு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

Previous articleT20 உலக கோப்பையை இப்படி நடத்துங்கள் – கவாஸ்கர் கூறிய யோசனை
Next articleவீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here