குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

0
241
#image_title

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 பணியிடங்களை நிரப்புவதற்கு இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் எனவும் மேலும் குரூப் 2-ஏ தேர்வுக்கான தேர்வு பட்டியல் ஏப்ரல் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் குரூப் 2 தேர்வில் காலியான 161 நேர்காணல் காலிப்ப பணியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இருந்தாலும் இன்னும் 29 நேர்காணல் பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றது.

இதையடுத்து நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு இறுதிக்கட்டமாக நேர்முகத் தேர்வு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக தகுதி உள்ள தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவுள்ள தேர்வர்களுக்கு தங்களுடைய விருப்பத்தை தெரிவிக்க மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த நேர்முகத் தேர்வு குறித்து தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும். விருப்பமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் அனைவரும் ஒடிஆர் மூலம் அதாவது ஒரு முறை பதிவு மூலமாக தங்களுடைய விருப்பத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த இறுதி நேர்முகத் தேர்வு முடிந்த பின்னர் நேர்காணல் பதவிகள் அல்லாத பணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பெயர்கள், மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் ஆகியவை ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.