உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலால் 3.50 லட்சம் பேர் வெளியேற வலியுறுத்தல்!!

0
73
3-50-lakh-people-urged-to-leave-due-to-russias-continuous-attack-on-ukraine
3-50-lakh-people-urged-to-leave-due-to-russias-continuous-attack-on-ukraine

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலால் 3.50 லட்சம் பேர் வெளியேற வலியுறுத்தல்!!

உக்ரைன்-ரஷியா இருநாடுகளுக்கிடையேயான போர் 135வது நாளாக தொடர்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது.

அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளன. ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்த ஸ்கெட்ச் போட்டுள்ளார்கள்.

அந்த நகரங்களில் மீது ரஷிய படைகள் இரவு மற்றும் பகல் பாராமல் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருவதாக மாகாண கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ குற்றம் சாட்டியுள்ளார். அந்த வகையில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

ரஷ்ய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் டொனெட்ஸ்க் மாகாணத்தில் வசிக்கும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு பாவ்லோ கைரிலென்கோ வலியுறுத்துகிறார். உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியது.

ரஷிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றிய அதிபர் புதின் போர் நீண்ட காலம் நீடிக்கும்போது அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் என்றார். மேலும் கெய்வ் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளை எச்சரிக்கிறார், மாஸ்கோ இன்னும் உக்ரைனில் தனது இராணுவ பிரச்சாரத்தை உறுதியாக தொடங்கவில்லை.

நாங்கள் இன்னும் தீவிரமாக போரை தொடங்கவில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் நாங்கள் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்த மறுக்கவில்லை. மறுப்பவர்கள் எங்களுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவது கடினமாக இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்றார்.இந்த தாக்குதல்களால் அப்பாவி மக்கள் அனைவரும் கொல்லாப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K